செய்திகள் :

கரூர்: எம் சாண்ட ஏற்றிச்சென்ற லாரி விபத்து; வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

post image

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கோடந்தூரில் செயல்பட்டுவரும் அரவிந்த் புளூ மெட்டல் கல்குவாரியில் தங்கி 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் கட்டுமான பணிக்காக எம் சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கரூர்- கோவை இணைப்பு சாலையில் தென்னிலை அருகே உள்ள முதலிகவுண்டம்பாளையம் அருகே அதிக வேகத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியின் மேல்பகுதியில் பயணித்த வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கந்தர் கேட்டா (வயது: 21), வித்யநாத் பிரபாகரன் (வயது: 47) மற்றும் அஜய் பங்கரா (வயது: 30) ஆகிய மூவரும் எம் சாண்ட் குவியலில் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.

உயிரிழந்த தொழிலாளர்
உயிரிழந்த தொழிலாளர்

அதோடு, அந்த லாரியில் பயணித்த அல்ஜீம் பர்வா (வயது: 30) என்பவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், உயிருடன் மீட்கப்பட்டார். மேலும், லாரி ஓட்டுநர் சந்திரகுமார் (வயது: 39) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் தகவலின்பேரில் விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் தென்னிலை காவல்துறை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தென்னிலை காவல் நிலைய போலீஸர் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு, தடய ஆய்வாளர் குழுவினருடன் இணைந்து விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து க.பரமத்தி வட்ட காவல் ஆய்வாளர் தங்கராஜ், "தென்னிலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அங்கிருக்கும் சமுக ஆர்வலர்கள் மத்தியில், அனுமதிக்கபட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவு பாரம் ஏற்றி சென்ற எம் சாண்ட் லாரியில் பணியாட்களை அமர வைத்து சென்றபோது, இந்த விபத்து நடைபெற்றதாகக் குற்றசாட்டு எழுந்துள்ளது.

உயிரிழந்த தொழிலாளர்
உயிரிழந்த தொழிலாளர்

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதும், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட அளவு கொண்டு எம் சாண்ட் லாரிகள் இயக்கப்பட வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

எம் சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி ஓன்று கவிழ்ந்ததில் மூன்று வடமாநில தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்

சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மெதினாவிற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு' -வத்தலக்குண்டு அருகே சோகம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (65). இவருடைய மனைவி ஜோதி, மற்றும் பேரக்குழந்தைகள் ஹர்சன் மற்றும் ஹர்ஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு உசிலம்பட்டியில் ... மேலும் பார்க்க

சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ரெட்டி உத்தரவு

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர... மேலும் பார்க்க

புனே: இரு லாரிகளிடையே சிக்கி தீப்பிடித்த கார் - 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்

புனே - பெங்களூரு இடையே பும்கர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் டிரைலர் லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. இதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி 13 வாகனங்கள் இதில் சேதம் அடைந்தன. விபத்தில் சிக்கிய ஒரு ... மேலும் பார்க்க

குன்னூர்: திடீரென கலைந்த தேன்கூடு; அலறியடித்த பண்ணை பணியாளர்கள்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள வண்டிச்சோலை பகுதியில் வனத்துறையின் நாற்றாங்கால் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான தாவர நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகின்றனர். நாற்று உற்பத்தி... மேலும் பார்க்க