செய்திகள் :

கரூர்: 3D கேமரா, சாலையை அளக்கும் பணி! - இரண்டாவது நாளாக CBI அதிகாரிகள் விசாரணை!

post image

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அந்த கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம், நாட்டையே உலுக்கியது.

இது தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், முதல் கட்டமாக நேற்று சி.பி.ஐ எஸ்.பி பிரவீன் குமார் தலைமையில், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் மூன்று குழுக்களாக பிரிந்து சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் முக்கிய கடைகளில் உள்ள சாலையோர சி.சி.டி.வி கேமராக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இது தவிர, அதிநவீன 3D கேமரா மூலம், அதிகளவில் கூட்டம் நின்ற கரூர் போதூர் பிரிவு சாலை முதல் வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் கரூர் வடிவேல் நகர் பேருந்து நிறுத்தம் வரை சுமார் 700 மீட்டர் அளவு பதிவிடும் பணியினை துவங்கினர்.

investigation

இந்த கேமரா மூலம் சாலை நடுவே பொருத்தி சாலையின் இரு புறமும் சுற்றளவு, நீளம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட்டு, இதில் எவ்வளவு பேர் நிற்கமுடியும் என்பதை கணக்கிட முடியும் என்பதால், நேற்று 7 மணி நேரம் சுமார் 400 மீட்டர் அளவு ஒளிப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில், சி.பி.ஐ ஏ.எஸ்.பி முகேஷ் குமார் தலைமையில் கரூர் வேலுச்சாமிபுரம் அமைந்துள்ள கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில், அதிநவீன 3D கேமரா மூலம், மீதமுள்ள 300 மீட்டர் அளவிடும் பணியை துவங்கினர்.

இதனால், கரூர் -ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் இரண்டாவது நாளாக செய்யப்பட்டது. எனவே, மாற்று வழியில் கோவை சாலை வழியாக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை வார சம்பள தினம் என்பதால், வேலுச்சாமிபுரம் வடிவேல் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றத்தால், சாலையோர கடை வைத்திருப்போர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சி.பி.ஐ அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இன்று மாலை 4.30 மணி அளவில் சி.பி.ஐ அதிகாரிகள் முடித்துக் கொண்டனர்.

இதன்பின்னர் இன்று காலை 6 மணி அளவில் கரூர்- ஈரோடு சாலையில் திருப்பி விடப்பட்ட பேருந்துகள், பின்னர் கரூர்- ஈரோடு சாலையில் மாலை 4.30 மணிக்கு மேல் மீண்டும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கபட்டது.

சம்பவ இடத்தில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு நாட்களில் 700 மீட்டர் அளவுக்கு துல்லியமாக அளவிட்டு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இதில், விஜய் வாகனம் நின்று பேசிய இடத்தில் மட்டும் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக 3D கருவி மூலம் ஒளிப்பதிவு செய்தனர்.

investigation

இரண்டாவது கட்டமாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு, பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ள சம்மன், த.வெ.க கட்சியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் கையில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், சி.பி.ஐ அதிகாரிகள் நேரடியாக சம்மனை வழங்குவதற்காக திட்டமிட்டுள்ளனர். பின்னர், அவர்களிடம் விசாரணை துவங்கப்பட உள்ளதாக சி.பி.ஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க