செய்திகள் :

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

post image

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது சரியாகவே, இப்போது அந்தக் குழப்பம் மடைமாறி கர்நாடகா அமைச்சர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

கடந்த ஜூன் 3-ம் தேதி, கர்நாடகா முதலமைச்சராக பொறுப்பேற்றார் டி.கே.சிவக்குமார். இவருடன் 13 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.

பதவியேற்ற இரண்டு நாள்களிலேயே (ஜூன் 5), தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராமலிங்க ரெட்டி. பெங்களூரு வளர்ச்சித் துறை தராமல் அவருக்கு பாசனத் துறை தந்தது தான் ராமலிங்க ரெட்டியின் அதிருப்தி.

பலகட்ட பேச்சுவார்த்தைகள், சமாதனங்களுக்குப் பிறகு, தன்னுடைய ராஜினாமாவை கடந்த 6-ம் தேதி, திரும்பப் பெற்றார் ராமலிங்க ரெட்டி.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

அடுத்ததாக, கிருஷ்ண பைரேகௌடா. இவருக்கு பெங்களூரு வளர்ச்சித் துறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை விட பெரிய துறை வேண்டும்... அதிகாரம் வேண்டும் என்று அமைச்சர் பதவியை ஏற்காமல் இருந்து வருகிறார்.

இவர் தனக்கு பவர்ஃபுல்லான அதிகாரம் வேண்டும் என்று காங்கிரஸ் டெல்லி தலைமை கதவுகளைத் தட்டி வருகிறார் கிருஷ்ண பைரேகௌடா.

கர்நாடகா காங்கிரஸின் சீனியர் தலைவர் கே.எச். முனியப்பா. இவருக்கு உணவு மற்றும் குடிமைப் பொருள்கள் துறை வழங்கப்பட்டது. அந்தத் துறை அவருக்குப் பிடிக்கவில்லை.

அதற்கு பதிலாக, சமூக நலத்துறை, விவசாயம் போன்ற வெயிட்டான துறைகளை எதிர்பார்க்கிறார்.

ஆக, கர்நாடகாவில் முதலமைச்சர் பிரச்னை தீர்ந்து அமைச்சர்கள் பிரச்னை தொடங்கியுள்ளது.

அனல் பறந்த ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸை வறுத்தெடுத்த மாநிலக் கட்சிகள்; 'அன்போடு' ராகுல் காந்தி பதில்!

டெல்லியில் ஜூன் 8 (நேற்று) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், பல மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் 'கூட்டணியின் செய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: மம்தா கட்சிக்குள் கலகம்! 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக அரசு?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை... மேலும் பார்க்க

சிங்கப்பெண் அதிரடிப்படை: 'பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன்'- முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூன்.9) தொடங்கி வைத்திருக்கிறார். இதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர் விஜய், " ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்த... மேலும் பார்க்க

DAC: OMR-ல் சாட்டிலைட் அலுவலகம் தொடக்கம்! சென்னையின் முதல் English-Themed வசிப்பிட திட்டம் அறிமுகம்

சென்னையின் மிகவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் IT தளமான பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR), 'DAC டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' தனது புதிய சாட்டிலைட் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது.இந்த திறப்பு... மேலும் பார்க்க

கிள்ளியூர்: காங்கிரஸ் அமைச்சர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த தவெக வேட்பாளர் மனு; கூட்டணியில் குழப்பம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில்கூட த.வெ.க வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மூன்றாம் இடத்திலும், மீதமுள்ள... மேலும் பார்க்க

'அது நான் இல்லை, போதைப்பொருள் கடத்தலுக்கும், எனக்கும்.!'- லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ விளக்கம் அளித்திருக்கிறார். ரூ.258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழ... மேலும் பார்க்க