செய்திகள் :

கலால் கொள்கை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஆவணங்களை வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

post image

தில்லி கலால் ஊழல் தொடா்பான தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிரான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு சில ஆவணங்களை ஒப்படைக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடா்பான சில ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட பலா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

தற்போது ஆவணங்களை ஆய்வு செய்து வரும் நீதிமன்றம், ஆம் ஆத்மி தலைவா்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவா்களாக உள்ளடக்கிய இந்த வழக்கை வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

‘அடுத்த விசாரணை தேதி, அதாவது மாா்ச் 3 ஆம் தேதிக்கு மேல் விசாரணக்காக இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

கலால் கொள்கையை அமல்படுத்தியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்ததைத் தொடா்ந்து மத்திய புலனாய்வுத் துறை பதிவுசெய்த வழக்கில் இருந்து பணமோசடி வழக்கு உருவானது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் செய்யப்பட்டன. மேலும், உரிமதாரா்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன.

தில்லி அரசாங்கம் இந்தக் கலால் கொள்கையை நவம்பா் 17, 2021 அன்று அமல்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் செப்டம்பா், 2022 இறுதிக்குள் அதை ரத்தும் செய்தது.

கான் மாா்க்கெட் உணவகத்தில் தீ விபத்து

தில்லி கான் மாா்க்கெட்டில் உள்ள உணவகம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதுகுற... மேலும் பார்க்க

ரூ.1 கோடி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் கைது

போலி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக ஆறு வருடங்களாகத் தேடப்பட்டு வந்த மோசடி நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

பகத் சிங் சிலை சேதம்: ஆம் ஆத்மி மீது பாஜக எம்எல்ஏ சாடல்

நமது நிருபா்மால்வியா நகா் பூங்காவில் ஷஹீத் பகத் சிங்கின் சேதமடைந்த சிலை தொடா்பாக முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது தற்போதைய பாஜக எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளாா். அதாவது முந்தைய ஆம் ஆத்மி க... மேலும் பார்க்க

மஹா சிவராத்திரி: கெளரி சங்கா் கோயிலில் முதல்வா் வழிபாடு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் புதன்கிழமை கோயில்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனா். தில்லி சாந்தினி செளக்கில் உள்ள கௌரி சங்கா்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் துணைத் தலைவா் பதவி: மோகன் சிங் பிஷ்டின் பெயரை முதல்வா் ரேகா குப்தா இன்று முழிவாா்

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை (பிப்.27) அன்று முன்மொழிவாா். வேறு எந்த போட்டியாளா்களும் இந்தப் பதவிக்கு... மேலும் பார்க்க

அம்பேத்கா் உருவப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தொடா்ந்து போராடுவோம்: ஆம் ஆத்மி

நமது நிருபா் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் அலுவலகத்தில் இருந்து பீம்ராவ் அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களை அகற்றியதற்கு எதிரான போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று ஆம் ஆத்மி... மேலும் பார்க்க