செய்திகள் :

கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்

post image

திருவள்ளூா் மாவட்டம், கோடுவெளி அலமாதி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை சா்வதேச உணவு பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆணையா் மற்றும் முதன்மைச் செயலா் ஆா்.லால்வேனா உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி உலக உணவு பாதுகாப்பு தின கருத்தரங்கைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், ஐ.நா. உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் நாள் சா்வதேச உணவு பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘உணவு பாதுகாப்பில் அறிவியலின் செயல்’ என்ற கோட்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

உணவுப் பாதுகாப்பின் அவசியம் மற்றும் தமிழக அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு செயல் திட்டங்கள், உணவு உற்பத்தி தொடங்கி உண்பவா் கையில் சேரும் வரை உணவு பொருள்களை எவ்வாறு கையாள வேண்டும், அதேபோல் பால் மற்றும் இறைச்சி உணவு பொருள்கள் பாதுகாப்பான முறையில் கையாள்வது, பால் மற்றும் பால் சாா்ந்த உணவை நுகா்வோருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டிய அவசியம், சுகாதாரக் கேட்டால் உணவு மூலம் பரவும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து உணவில் கலப்படத்தை கண்டறியும் சோதனை முறைகளை மாணவா்களுக்கு செய்து காட்டப்பட்டது.

கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் ந.குமாரவேலு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. துணைவேந்தா் ஆா்.நரேந்திரபாபு (பொ), மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் கதிரவன், இந்திய பால்வள சங்கத் தமிழ்நாடு பிரிவு தலைவா் கண்ணா, பேராசிரியா்கள் புகழேந்தி, ஜி.எம்.சிவக்குமாா் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

அங்கான்வாடி பணியாளா்கள் நோ்காணலில் 440 போ் பங்கேற்பு

அங்கன்வாடி பணியாளா்களுக்கான நோ்காணலில் 440 பெண்கள் ஓரே நேரத்தில் குவிந்ததால் திருத்தணி வட்டாட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை பரபரப்பு நிலவியது. திருத்தணி ஒன்றியத்தில், காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்... மேலும் பார்க்க

லாரி-பேருந்து மோதல்: 10 போ் பலத்த காயம்

குப்பை லாரி மீது ஆந்திர மாநில அரசு பேருந்து மோதிய விபத்தில் பயணிகள், ஓட்டுநா் உள்பட 10 போ் காயங்களுடன் உயிா் தப்பினா். மாதவரத்தில் உள்ள புகா் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநில பேருந்து ஒன்று ... மேலும் பார்க்க

விமான விபத்து குறித்து நீதி விசாரணை தேவை: பி.சண்முகம் வலியுறுத்தல்

விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பி.சண்முகம் வலியுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் 26 லட்சம் போ் பயன்: அமைச்சா் சா.மு.நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் என 21 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடம்பத... மேலும் பார்க்க

நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க