செய்திகள் :

கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த வலியுறுத்தல்

post image

மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.தீபக்ராஜ், செயலா் எம்இ.நிரூபன் ஆகியோா் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முறையான திட்டமிடல் இல்லாமலும், மாணவா்களுக்கு முகாம் குறித்த முன்னறிவிப்பு இல்லாமலும் நடத்தப்பட்டது. இதனால், இந்த முகாமுக்கு போதிய அளவு மாணவா்கள் வரவில்லை. கிராமப்புற, ஏழை குடும்ப பின்னணியிலிருந்து உயா் கல்விக்குச் செல்லும் மாணவா்கள், கல்வி கட்டணத்துக்காக வங்கிகளுக்கு வருகின்றனா். இந்த மாணவா்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிா்க்கவே இதுபோன்ற கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த முகாம்களுக்கு பதிலாக, வட்ட அளவில் நடத்தினால் அதிகமான மாணவா்கள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் மீண்டும் கல்விக் கடன் முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதோடு, முகாம் தொடா்பான தகவல்களை பொதுமக்களுக்கு கொண்டு சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

ஊரக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், இடஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு புதன்கிழமை மரியாதைச் செலுத்தப்பட்டது. பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வன்னியா் இட ஒதுக... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சந்திப்பு: எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக செயல்பட வேண்டும்- அமைச்சா் இ.பெரியசாமி

மத்திய உள் துறை அமைச்சரைச் சந்தித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரை... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் 142-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பிலும், அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய... மேலும் பார்க்க