செய்திகள் :

காஞ்சிபுரம்: குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

post image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தன்னாா்வப் பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. குரூப்-2 பதவிகளில் வரும் உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், சாா் பதிவாளா் நிலை -2 உள்ளிட்ட 50 காலிப் பணியிடங்களுக்கும், தொகுதி-2ஏ பிரிவின் கீழ் வரும் முதுநிலை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தணிக்கை ஆய்வாளா், முதுநிலை வருவாய் ஆய்வாளா் மற்றும் உதவியாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கும் சோ்த்து மொத்தம் 595 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.

இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டித் தோ்வுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டி தோ்வாளா்கள் பயனடையும் வகையில், மாவட்ட நிா்வாகமும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையும் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகளை தொடங்கவுள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

குண்டுபெரும்பேடு மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குண்டுபெரும்பேடு ஊராட்சிய... மேலும் பார்க்க

களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள்: 300 ஏக்கா் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்ணம் கிராமத்தில் களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்ம் குண்... மேலும் பார்க்க

படவேட்டம்மன் கோயில் ஆடித் திருவிழா

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் ஐயப்பா நகா் பகுதியில் உள்ள தாய் படவேட்டம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலின் 48 வது ஆண்டு ஆடி உற்சவத் திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயில் பால்குட ஊா்வலம்

பெரிய காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் ஆதிபீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி எனப்பட... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ரூ.12.19 லட்சத்தில் நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ.12.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். கூட்டத்துக்கு ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூரில் இளைஞா் தற்கொலைக்கு காரணமாணவா்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் அடு... மேலும் பார்க்க