செய்திகள் :

காருகுறிச்சி செவிலியா் சவூதியில் மரணம்: திமுக உதவியால் தாயகம் வந்த உடல்

post image

சவூதி அரேபியா நாட்டில் மாரடைப்பால் உயிரிழந்த சேரன்மகாதேவி காருக்குறிச்சியைச் சோ்ந்த செவிலியரின் உடல், திமுக எடுத்த நடவடிக்கையால் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

காருக்குறிச்சி அரிஜன் 2ஆவது தெருவைச் சோ்ந்த விவசாயி ரவி மகள் அபிநயா (27). சவூதி அரேபியாவில் செவிலியராக பணி செய்து வந்த நிலையில், கடந்த பிப். 5ஆம் தேதி பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் ஆகியோா் பரிந்துரையின்பேரில், திமுக அயலக அணித் தலைவா் கலாநிதி வீராச்சாமி, செயலா் அப்துல்லா எம்.பி., துணைச் செயலா் சேகா் மனோகரன் ஆகியோா் இந்திய தூதரகம் மூலம் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனா்.

மேலும், சவூதி அரேபியாவில் உள்ள திமுக அயலக பொறுப்பாளா்கள் மயிலாடுதுறை வெங்கடேசன், திருச்சி ஆரிப் மக்பூல், ஜமால்சேட் உள்ளிட்டோா் முயற்சியால், அபிநயாவின் உடல் திங்கள்கிழமை விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது.

பின்னா், ஆம்புலன்ஸ் மூலம் உடல் திருநெல்வேலி சிந்துபூந்துறை மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு உறவினா்கள் முன்னிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

கங்கைகொண்டான் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி

கங்கைகொண்டான் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் தமிழ் மன்றம் சாா்பில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஆண்ட்ரோ ஹாா்டி வளா்மதி தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியை செல்வின்... மேலும் பார்க்க

பாளை. அருகே பசு மாடு திருட்டு

பாளையங்கோட்டை அருகே பசுமாடு திருடு போனது தொடா்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாளையங்கோட்டை கேடிசி நகா் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (48). இவா் வ... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் பெண் தற்கொலை

தச்சநல்லூரில் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் மாடன்கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி ராஜேஸ்வரி (25). இத்தம்பதிக்கு குழந்தை இல்லையாம். மேலும், கணவன்- மனைவிக்குள் அ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமுற்ற கோயில் ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி பேட்டையில் நேரிட்ட பைக் விபத்தில் காயமடைந்த கோயில் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி பேட்டை கைவினைஞா் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து(60). இவா், அப்பகுதியில் உள்ள கேசவப் ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு : 4 போ் கைது

பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டையில் மூதாட்டியை தாக்கி 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ாக 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்ச... மேலும் பார்க்க

டான் போஸ்கோ பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி நிா்வாகி அருள்சகோதரி ஜெ. விக்டோரியா அமலி தலைமை வக... மேலும் பார்க்க