செய்திகள் :

`காருடன் கடலில் சென்ற பிரபலங்கள்' கடற்கரை பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்

post image

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு விடுத்திருந்தார். ஷாருக்கானுக்கு மும்பை அருகில் உள்ள அலிபாக் கடற்கரையில் பண்ணை வீடு இருக்கிறது.

அந்த பண்ணை வீட்டிற்கு காரில் செல்வதை விட படகில் செல்வதுதான் வசதியாக இருக்கும். எனவே பாலிவுட் நட்சத்திரங்கள் இயக்குநர் பராகான், கரண் ஜோகர், நடிகை ராணி முகர்ஜி, அனன்யா பாண்டே, அமிதாப்பச்சனின் பேரன் நவ்யா நந்தா உட்பட ஏராளமானோர் அலிபாக் பண்ணை வீட்டிற்கு நேற்றே சென்றுவிட்டனர்.

அவர்கள் படகு மூலம் அங்கு சென்றனர். தங்களுடன் காரையும் கப்பலில் எடுத்துச் சென்றனர். அவர்கள் படகில் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோவை பராகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னை பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்ததற்கு நன்றி என்றும், இந்த அனுபவம் தனது வாழ்நாளில் சிறந்த அனுபவம் என்று இந்த அனுபவத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

ஷாருக்கான் வீட்டிற்கு வெளியில் ரசிகர்கள்

நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கி ஷாருக் கானின் பிறந்தநாள் பார்ட்டி அதிகாலை வரை நடந்தது. இதில் ஷாருக் கான் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். ஷாருக் கானுக்கு சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் உள்ள ஷாருக்கானின் மன்னத் பங்களாவில் நேற்று இரவே ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் நள்ளிரவில் மன்னத் பங்களாவிற்கு வெளியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர். துபாய், டெல்லி, கொல்கத்தா மற்றும் தென்னிந்தியாவில் இருந்து ரசிகர்கள் வந்திருந்தனர். தற்போது மன்னத் பங்களா புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. எனவே ஷாருக் கான் வேறு வீட்டில் வசித்து வருகிறார்.

'பயோகேஸ் உரம், மாடித்தோட்டம், ஆர்கானிக் முறை' - காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் ரகுல் பிரீத் சிங்

பாலிவுட் நடிகைகளில் அதிகமானோர் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் வைத்திருக்கின்றனர். நடிகை ரேகா தனது வீட்டு வளாகத்தில் தோட்டம் வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் ரகு... மேலும் பார்க்க

"விவாகரத்து பற்றி நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை" - வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.இது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்து தெரிவிக்க... மேலும் பார்க்க

``என் கணவருக்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறுவார்கள், ஆனால்'' - பாலிவுட் நடிகர் கோவிந்தா மனைவி

பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர். கோவிந்தா... மேலும் பார்க்க

Shah Rukh Khan: அம்மாவுக்கு மருந்து வாங்க காசில்லாத வறுமை; 'பாலிவுட் சாம்ராஜ்ய நாயகன்' உருவான கதை

எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொட்டவர்களின் பின்னணி கதை பெரும் பாடமாக இருக்கும். குறிப்பாக திரையுலகில் மாபெரும் இடத்தைப் பிடித்த ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை பலரும் பெரும் துயரத்த... மேலும் பார்க்க

Abhishek Bachchan: பணம் கொடுத்தா விருது வாங்கினேன்?- விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் 'I Want To Talk' என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை வென்றார். ஆனால் அந்த விருதை அவர் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வா... மேலும் பார்க்க

"அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது" - விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2020-21-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்க... மேலும் பார்க்க