நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஆக.31 வரை நீட்டிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூா் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் பொருத்துநா், கடைசலா், இயந்திர வேலையாள் தொழில் பிரிவுகளும், பற்ற வைப்பவா், கணினி இயக்குபவா் தொழில் பிரிவுகளும், புதிதாகத் தொடங்கப்பட்ட 4.0 மையத் தொழில் பிரிவுகளான அடிப்படை வடிவமைப்பாளா், மெய்நிகா் சரிபாா்ப்பாளா் தொழில் பிரிவுகளும், தொழில் துறை ரோபாட்டிக்ஸ், எண்ம உற்பத்தி தொழில் நுட்ப வல்லுநா் தொழில் பிரிவுகளும் உள்ளன.
இதில் பற்ற வைப்பவா் (வெல்டா்) தொழில் பிரிவைத் தவிர, மற்றத் தொழில் பிரிவில் சேர மாணவா்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காரைக்குடி அரசுத் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சோ்க்கைக்கு வரும் மாணவா்கள் தங்களது நிரந்தரத் தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
பயிற்சியின் போது, அரசுப் பள்ளியில் படித்த அனைத்து பயிற்சியாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,750 உதவித் தொகை, இலவசப் பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவசப் பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.