செய்திகள் :

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறையின் நடவடிக்கை சரியானதுதான் - PMLA உத்தரவு

post image

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கியது சரியானதுதான் என்று 'பணமோசடி தடுப்புச்சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (PMLA) உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

2007 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அப்போதைய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

அப்போது பீட்டர் முகர்ஜி, இந்திராணிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ரூ 300 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றது. அதற்காக விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அந்நிய முதலீட்டைப் பெற ப.சிதம்பரம் அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேட்டை மறைக்க ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தனக்குச் சொந்தமான நிறுவனங்கள் மூலம் உதவி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, 2018 ஆம் ஆண்டில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ 54 கோடி மதிப்பிலான சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கியது.

கார்த்தி சிதம்பரம்

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று, 'பணமோசடி தடுப்புச்சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய'த்தில் (PMLA) கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு செய்திருந்தார். "சொத்துகளை பறிமுதல் செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் முந்தைய அறிவுறுத்தலின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தீர்ப்பாயத்தில் அமலாக்கத்துறை வாதிட்டதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை உறுதி செய்த தீர்ப்பாய உறுப்பினர்கள் மேல்முறயீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? விவரம் கேட்கும் உயர்நீதிமன்றம்

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அரசுத்தரப்பில் விவரம் கேட்டுள்ளது .இந்து சமய அறநிலையத்துறைசேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ச... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.இதனையடுத்து, `சதுப... மேலும் பார்க்க

`கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?’ - உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகளை உள்ளிட்ட அ... மேலும் பார்க்க

`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்... மேலும் பார்க்க

CJI கவாய் மீது காலணி வீசிய வழக்கு: ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிமன்றம் - ஏன்?

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்தமுயன்ற வழக்கில், வழக்கறிஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் விரும்பவி... மேலும் பார்க்க

கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் - நடந்தது என்ன?

கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்... மேலும் பார்க்க