செய்திகள் :

காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வருகை: விஜய்யை விமர்சித்த திருமாவளவன்

post image

காலவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதாக தவெக தலைவர் விஜய்யை விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா, தமிழக ஆளும் கூட்டணியை விமர்சித்திருந்தனர்.

இதையும் படிக்க : பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

இந்த நிலையில், தருமபுரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதன்கிழமை இரவு பேசிய திருமாவளவன் விஜய்யை விமர்சித்துள்ளார்.

திருமாவளவன் பேசியதாவது:

“அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் கொள்கைகளில் எனக்கு தெளிவு இருக்கிறது, தீவிரமான பிடிப்பு இருக்கிறது. ஆகையால், என்னை எந்த கொம்பனாலும் விலைக்கு வாங்க முடியாது.

சராசரி அரசியல்வாதியாக இருந்திருதால் கட்சிக்கு எப்போதே அங்கீகாரம் பெற்றிருக்க முடியும்.

10 ஆண்டுகள் தேர்தல் அரசியலுக்கு வராமல் மொத்தம் 35 ஆண்டுகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற பாடுபட வேண்டியிருந்தது.

சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து பணத்தையும் சுகத்தையும் தேடி, இளம்காலத்தை சொகுசாக கழித்துவிட்டு தேவையான சொத்துகளை சேர்த்தபிறகு, காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்.

அவர்கள் ஊர் ஊராகச் சென்று அழைந்து கொடியேற்ற வேண்டியதில்லை, மக்களை சந்திக்க தேவையில்லை, உடனடியாக கட்சியைத் தொடங்கி ஆட்சிக்கு போக நினைக்கிறார்கள்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. அரசியல் வல்லுநர்கள் ஆராய்ந்து சொல்லி உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

பெருநகர சென்னையின் கடன்தொகை ரூ. 3,065.65 கோடி: மேயர் பிரியா

பெருநகர சென்னையின் கடனுக்காக வட்டி மட்டும் ரூ. 8.5 கோடி செலுத்தப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 28)ல் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்.28 (நாளை) கடலோர தமிழகத்தில் அநேக இடங்க... மேலும் பார்க்க

நான் தலைமறைவாக இல்லை; காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? - சீமான் பேட்டி

நான் தலைமறைவாக இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஓசூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'நான் எங்கும் தலைமறைவாக இல்லை. நான் பயந்து எங்கும் ஓடிவிட மாட்டேன். நான்... மேலும் பார்க்க

சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 92 வயது மூதாட்டி!

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 63வது ஆண்டாக முத்தம்மாள்(92)என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்க... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலிவு விலை கஃபேவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்துவைத்தார்.நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உணவகங்களை திறக்க வேண்டும... மேலும் பார்க்க