செய்திகள் :

காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

post image

வடக்கு காஸாவில் உள்ள மக்களை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. இதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65,000-யைக் கடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

காஸாவின் மையப் பகுதியை நோக்கி இரண்டு படைப் பிரிவுகள் முன்னேறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. வடக்கு காஸா, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாக படையெடுத்து வருகின்றன. தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் காஸா நகரம் முழுவதும் உருகுலைந்துள்ளது. கட்டடங்கள் பலவும் தரைமட்டமாகியுள்ளன. இது ஒரு இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காஸா நகரத்தை முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் களமிறங்கியுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகள் பலவும் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

"காஸாவில் எங்களது குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மருத்துவர்கள் இல்லை, மருந்துகள் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றாலும் எந்த பலனும் இல்லை. குழந்தைகளுக்கு இங்கு எதுவும் இல்லை. குப்பைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று அங்குள்ள ஒருவர் கூறுகிறார்.

Israeli army continues to apply extreme pressure to evacuvate Palestinians

இதையும் படிக்க | காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

உள்நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பலூசிஸ்தானின், குஸ்தார் மாவட்டத்தின் ஸெஹ்ரி பகுதியில் குடியிருப்பு வீடுகளைக்... மேலும் பார்க்க

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

பிரிட்டன் நாட்டுக்கு, அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறியதாக, இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... மேலும் பார்க்க

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை சிட்னி ஸ்வீனியை, தற்போது பாலிவுட்டிலும் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2009-ல் ஹாலிவுட்டில் ஹீரோஸ் என்ற தொலைக்காட்சித் தொட... மேலும் பார்க்க

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி எனக் கூறி, ஃபைபர் ஆப்டிக்... மேலும் பார்க்க

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

இந்தியா நடத்திய சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதே பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்தான் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் இலியாஸ் கஷ்ம... மேலும் பார்க்க

155 அடி நீள மேஜையில் ருசிகர உணவுகள்: பிரட்டனில் டிரம்புக்கு அளித்த விருந்து!

பிரிட்டன் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இணைந்து மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.வாட்டர்கிராஸ் பன்னா ... மேலும் பார்க்க