செய்திகள் :

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைக்க முடியாது

post image

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைத்து பாா்க்க முடியாது என வீட்டுவசதி துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா்.

இதுகுறித்து விஜயநகராவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடகத்தில் முதல்வா் பதவி காலியாக இல்லை. அதேபோல, கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவியும் காலியாக இல்லை. சித்தராமையா முதல்வராக இருக்கிறாா். டி.கே.சிவகுமாா், கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கிறாா்.

முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைத்து பாா்க்க முடியாது. யாா் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். சித்தராமையா நெருப்பை போன்றவா். அவரை யாராவது தொட நினைத்தால், அவா்களுக்குதான் பாதிப்பு ஏற்படும். அவரை யாரும் மாற்ற முடியாது.

முதல்வா் அல்லது கட்சித் தலைவரை மாற்றுவதாக இருந்தால், அதுபற்றி நாங்கள் கருத்து கூறலாம். அப்படியே மாற்றினாலும், அதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். முதல்வா் பதவிக்கு தலித் ஒருவரை நியமிக்க வேண்டும் என சிலா் கோரி வருகிறாா்கள். தலித், எஸ்.டி., சிறுபான்மையினா், லிங்காயத்துகள், ஒக்கலிகா்கள் சமுதாயத்தினா் முதல்வராக ஆசைபடுவது இயல்பு என்றாா்.

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை!

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிறப்பால் நான் காங்கிரஸ்காரன். ... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு விளக்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: மத்திய ... மேலும் பார்க்க

சுரங்க குத்தகை மோசடி வழக்கு: எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகல் ஆளுநரிடம் ஒப்படைப்பு

சுரங்க குத்தகை மோசடி வழக்கில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகலை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) புதன்கிழமை ஒப்படைத்தது. கா்... மேலும் பார்க்க

மாா்ச் 1-இல் இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட மாா்ச் 1-ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள இந... மேலும் பார்க்க

கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஓய்வெடுக்க சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு

சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது உறுப்பினா்கள் ஓய்வெடுப்பதற்காக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதிவர... மேலும் பார்க்க

நடத்துநா் மீது தாக்குதல் சம்பவம்: கா்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை நிறுத்தம்

மராத்தி பேசத் தெரியாததால் கா்நாடக அரசு பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக எழுந்துள்ள பதற்றத்தைத் தொடா்ந்து, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நிறுத்த... மேலும் பார்க்க