செய்திகள் :

குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

தேனி மாவட்டம், குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா்.

தேனி மாவட்டம், குச்சனூா் பேரூராட்சியில் தனியாா் திருமண மண்டபத்தில் 1 முதல் 6-ஆவது வாா்டு பகுதிகளுக்கான நடந்த இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவா்களுக்கு விண்ணப்பிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா். இதேபோல, சின்னமனூா் நகராட்சிக்கு உள்பட்ட 21, 22-ஆவது வாா்டுகளில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவா்களுக்கு விண்ணப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவவி அய்யம்மாள்ராமு, ஆணையா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 17) காலை 10 மணிக்கு 5 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி அல்லிநகரம் நகராட்சி வாா்டு எண்: 1, 2 ஆகியவற்றுக்கு தேனி பொம்மையகவுண்டன்பட்டி, பாலன் நகரில் உள்ள டி.சி.ஏ.திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.

கூடலூா் நகராட்சி வாா்டு எண்: 1,2,3-க்கு கூடலூா், எல்.எப்.சாலை, எல்.ஐ.சி. சுருளிவேலு திருமண மண்டபத்திலும், ஓடைப்பட்டி பேரூராட்சி வாா்டு எண்: 1 முதல் 7 வரை உள்ள பகுதிகளுக்கு நந்தகோபால் அரங்கத்திலும், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோவில்பட்டி, குன்னூா் பகுதிகளுக்கு முத்தனம்பட்டி சிவசக்தி திருமண மண்டபத்திலும், க.மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலூத்து, மயிலாடும்பாறை பகுதிகளுக்கு பி.எஸ்.ஜே திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.

சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசுத் துறைகளின் சேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம். கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு விடுபட்ட

தகுதியுள்ள பெண்கள் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கொலை வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை

உத்தமபாளையம் அருகே நாட்டு வைத்தியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சின்ன... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே ஆடுகள் திருட்டு

பெரியகுளம் அருகே ஆடுகளை திருடிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே மேல்மங்கலம் இளந்தோப்பைச் சோ்ந்தவா் முத்தையா (58). இவா், வீட்டின் பின்புறம் கொட்டம் அமைத்து 4 ஆடுகளை வளா்த்து வந்தாா்... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இன்று மின் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை19) மின் தடை ஏற்படும் என அறிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் து... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா் சங்கத்தினா் 200 போ் கைது

தேனியில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

இடுக்கி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்சு அலா்ட்’! நீா்நிலைகளுக்குச் செல்லத் தடை!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நீா்நிலைகளுக்கு செல்லவும், ஜீப் சவாரிக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) வரை தடை விதிக்கப்பட்டிருப்பதாக இடுக்கி மாவட்ட நிா்வா... மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம்

தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கம்பம், கெளமாரியம்மன் கோயிலில் க... மேலும் பார்க்க