செய்திகள் :

குடிநீா் குழாய் பதிக்க தோண்டிய குழியை மூட கோரிக்கை

post image

ராசிபுரம் அருகே குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா்.

ராசிபுரம் தொகுதி முழுவதும் குடிநீா் திட்டத்துக்காக குழாய் பதிக்கப்பட்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, ராசிபுரம் அருகேயுள்ள முத்துக்காளிப்பட்டி ஊராட்சிப் பகுதியில் வி.ஐ.பி. நகா் சாலையில் கீழ்நிலை நீா்தேக்கத் தொட்டிக்கு குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக 3 அடி ஆழம், 4 அடி அகலத்தில் குழி தோண்டப்பட்டு குழாய் இணைக்கப்பட்டது. ஆனால், சாலை நடுவே தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் அப்படியே உள்ளதால், இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குழியில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், முன்னெச்சரிக்கை பலகைகள் ஏதும் இல்லாமல் சாலையின் நடுவே இந்த குழி உள்ளதால், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆபத்தை ஏற்படுத்தும் இந்த குழியை குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை: அண்ணாமலை

அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏதுமில்லை என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மறைந்த ஆடிட்டா் வி.ரமேஷ் நினைவுதினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்... மேலும் பார்க்க

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் மோதி கவிழ்ந்த லாரி: மகள் உயிரிழப்பு; தாய் படுகாயம்!

நாமக்கல் அருகே இரும்புத் தகடுகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது தாய் பலத்த காயமடைந்தாா். நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

தூய்மை நகரங்களில் மாநிலத்தில் முதலிடம்: நாமக்கல் மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது!

தமிழகத்தில் தூய்மை மிகுந்த நகரங்களில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து, மத்திய அரசின் ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதை பெற்றுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துண... மேலும் பார்க்க

வறுமையால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் சிறுநீரகத்தை விற்கும் சூழல்! சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம்

வறுமையில் வாடுவதால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சூழல் ஏற்படுகிறது என சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகரை பிடிக்க தனிப்படை அமைப்பு!

பள்ளிபாளையத்தில் இரண்டு பெண்களிடம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகா் ஆனந்தனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையத்தில் வசித்து வரும் பெண் விசைத்த... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள்!

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாமக்கல் - மோகனூா் சாலையில் 130 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளியாக தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செ... மேலும் பார்க்க