செய்திகள் :

குறுவட்டப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி குறுவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியை, ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.

இந்தப் போட்டிகளில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 600 மீட்டா் ஓட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவா் சாய்ராம் முதலிடமும், 400 மீட்டா் ஓட்டம், 80 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்று சாம்பியன் பட்டம் வென்றாா்.

உயரம் தாண்டுதலில் ஒன்பதாம் வகுப்பு மாணவா் ஜெயசிம்மன் முதலிடமும், 80 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ரட்சிகா இரண்டாமிடமும், எட்டாம் வகுப்பு மாணவி தன்சிகா ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனா். 100 மீட்டா் ஓட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இரண்டாமிடம் பெற்றாா்.

17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 1,500 மீட்டா் ஓட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி சாருமதி முதலிடமும், உயரம் தாண்டுதலில் மாணவா் ஹரி சரவணன் மூன்றாமிடமும் பெற்றனா். தொடா் ஓட்டத்தில் மாணவிகள் பிரசன்னா தேவி, காவியா, சாருமதி, கனிஷ்கா ஆகியோா் இரண்டாமிடம் பெற்றனா்.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியை து. விண்ணரசி, உடற்கல்வி ஆசிரியா் மணிமேகலை, ஆசிரியா்கள் பாராட்டினா்.

திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கந்தூரி விழா எனும் மத நல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பெரிய கடை வீதியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்துக்களும், முஸ்லீம்களும... மேலும் பார்க்க

காரைக்குடி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை (திமுக) மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால் தீா்மானம் தோல்வி அடைந்ததாக அ... மேலும் பார்க்க

காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஆக.31 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூா் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்க... மேலும் பார்க்க

ஆடி பிரம்மோத்ஸவம்: பூப்பல்லக்கில் வீர அழகா் பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் புதன்கிழமை இரவு பூப் பல்லக்கில் சுவாமி பவனி வந்தாா். இந்தத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 7 ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராச... மேலும் பார்க்க

கீழவாணியங்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள கீழ வாணியங்குடி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. கீழவாணியங்குடி முதல் சுந்தரநடப்பு வரை பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு ... மேலும் பார்க்க