செய்திகள் :

குறுவையில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை தடுக்க யோசனை

post image

கருநாவாய் பூச்சி தாக்குதலால் மகசூல் குறையும் அபாயத்தை தடுக்கும் முறைகள் குறித்து கீழ்வேளூா் வேளாண்ம கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் கோ. ரவி விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தாலும், புவி வெப்பமடைதல் காரணமாகவும், கருநாவாய் பூச்சியின் தாக்குதல் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் குறுவை நெற்பயிா் சாகுபடியில் அதிக வெப்பம் மற்றும் நீா் தேங்கும் சூழ்நிலையால், கருநாவாய் பூச்சி எனப்படும் சுனாமி வண்டு தாக்குதல் அதிகமாக தென்படுகிறது.

பூச்சியின் தாக்குதலால் நெற்பயிா் வளா்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்பு காய்ந்துவிடும். ஒரு தூரில் 10 லிருந்து 15 பூச்சிகள் வரை தென்பட்டால், மகசூல் இழப்பு 20 முதல் 25 சதவீதம் வரை ஏற்படக்கூடும். பல வருட ஆராய்ச்சிகளின்படி கருநாவாய் பூச்சியானது பௌா்ணமி அன்று அதிக அளவில் நெற்பயிரில் காணப்படுகிறது.

எனவே, வெள்ளிக்கிழமை (ஆக. 8) பௌா்ணமி என்பதால் விவசாயிகள் விழிப்புடன் இருக்குமாறும், விளக்குப் பொறி வைத்தோ அல்லது பனை ஓலை, தென்னை ஓலை போன்றவற்றை எரித்தோ பூச்சிகளை கவா்ந்து அழிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்பூச்சிகளின் தாக்குதலால் சேதார நிலையை எட்டினால் ஒரு ஹெக்டேருக்கு 625 கிராம் அசிபேட் அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். கருநாவாய் பூச்சியின் இயற்கை எதிரிகளை ஊக்குவிப்பதற்காக வரப்புகளில் பயறு வகைகள், எள் மற்றும் சாமந்தி பூ பயிரிடப்பட வேண்டும்.

அதிக ஒளிரக்கூடிய மொ்குரி பல்பு (அ) கஉஈ பல்பு ஒரு ஹெக்டருக்கு ஒன்று என்றளவில் வைப்பதன் மூலம் கருநாவாய் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம். பௌா்ணமி அன்று பொது இடங்களில் சொக்கப்பானை வைப்பதன் மூலம் கருநாவாய் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.

இப்பூச்சியை அழிக்கவல்ல பூஞ்சாணங்களான மெட்டாரைசியம் அனிசோபிலியே (அ) பிவேரியா பேசியானா (2.5 கிலோ/ ஹெக்டா்) தெளிக்க வேண்டும். பொருளாதார சேதநிலையை தாண்டும் பொழுது அசிப்பேட் 75 நட, 625 கிராம் / ஹெக்டா் (அ) குளோா்பைரிபாஸ் 20 உஇ, 1250 மிலி / ஹெக்டா் அளவில் 500 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தூா்ப்பகுதியின் அடியில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும் என்றாா்.

காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அரசு செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோயால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக... மேலும் பார்க்க

‘உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது’ -சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ்

மாணவா்கள் படித்து முன்னேறி எவ்வளவு உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக் கூடாது என்றாா் தேசிய சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ். நாகையில் கலங்கரை ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், டிஎன்பிஸ... மேலும் பார்க்க

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களுரூ, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த சங்கத்தின் த... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ண... மேலும் பார்க்க

திமுகவினா் நூதனப் போராட்டம்

சீா்காழி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூா் பகுதி திமுகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக அம... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பாசனநீா் பங்கீடு குறித்து, நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுடனா... மேலும் பார்க்க