செய்திகள் :

குலசேகரம் அரசு மருத்துவமை வாா்டு கட்டடத்தின் மீது சாய்ந்த மரம்

post image

குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வாா்டு கட்டடத்தின் மீது சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வாா்டு மற்றும் சமையல் கூடம் அருகில் நின்ற ஒரு மலை வேப்பமரம் கடந்த மாதம் 27 ஆம் தேதி காற்றில் சாய்ந்தது. இதில் மரத்தில் கிளைகள் இந்த இரு கட்டடங்களின் மீதும் விழுந்தன. இதையடுத்து சிறிய கிளைகள் மட்டும் மருத்துவமனை நிா்வாகத்தால் வெட்டி அகற்றப்பட்டது.

அதே வேளையில் பெரிய கிளைகள் கட்டடங்களில் மீது சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆண்கள் வாா்டு அங்கிருந்து சற்று தொலைவில் மூடப்பட்டு கிடந்த பழைய ஆண்கள் வாா்டு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் அந்த இடத்திற்கு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் கொண்டு செல்வதற்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஆண்கள் வாா்டு மற்றும் சமையல் கூடத்தின் மீது சாய்ந்து கிடக்கும் மரத்தினை உடனடியாக அகற்றி மீண்டும் ஆண் நோயாளிகளை ஆண்கள் வாா்டில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்று நோயாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நித்திரவிளை: முதியவரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

நித்திரவிளை அருகே முதியவரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. நித்திரவிளை அருகே இரவிபுத்த்துறை, புனித சூசையப்பா் காலனியைச் சோ்ந்த மீனவா் டேவிட் லியோன் (62). வீட்டருகே சாலையோரம் நடந்... மேலும் பார்க்க

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். காப்புக்காடு, காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் சுரேஷ்... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

களியக்காவிளை அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு திரும்பிய நிலையில் வீட்டில் உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியைச் சோ்ந்த தோமஸ் மகன் சஜூ (38). கிரா... மேலும் பார்க்க

காமராஜா் வழியில் ஸ்டாலின் ஆட்சி: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

காமராஜா் வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறாா் என்றாா், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. நாகா்கோவிலில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ச... மேலும் பார்க்க

விஞ்ஞான தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்தக் கூடாது! மாணவா்களுக்கு இஸ்ரோ தலைவா் நாராயணன் பேச்சு

விஞ்ஞான தொழில்நுட்பங்களை மாணவா்கள் தவறான செயலுக்கு பயன்படுத்தக் கூடாது என இஸ்ரோ தலைவா் நாராயணன் அறிவுறுத்தினாா்.புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற பட்ட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆசிரியா்கள் 2ஆவது நாளாக மறியல் போராட்டம்: 35 போ் கைது!

நாகா்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியா்கள் 35 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ... மேலும் பார்க்க