செய்திகள் :

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

post image

பரமக்குடியில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளியை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சித்திரைக்கண்ணன் (48). இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றாா். போா்டிங் சாலையில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் இவரை துரத்தினா்.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள தரகு கடைக்குள் சித்திரைக் கண்ணன் ஓடி ஒளிந்தாா். அப்போது அந்த கடைக்குள் புகுந்த இருவரும், வாளால் சித்திரைக்கண்ணனை வெட்டிவிட்டுத் தப்பினா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.

செம்மண்குண்டு ஊருணியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊருணியில் கழிவு நீரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் நகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இதில் நகரா... மேலும் பார்க்க

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேருந்து நிலையத்துக்கு பட்டுக்கோட்டை, மீமசல், ராமேசுவரம், அறந்தாங்கி, ராமநாதபுர... மேலும் பார்க்க

வனத் துறை காப்பு நிலத்தில் மதுப்புட்டிகள் அகற்றம்

ராமேசுவரம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்பு நிலத்திலிருந்து நெகிழி, மதுப்புட்டிகளை சனிக்கிழமை அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் வனத் துறைக்கு சொந்தமான காப்... மேலும் பார்க்க

சூறைக்காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியதால் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் கிராமம் ... மேலும் பார்க்க

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்: 3,283 போ் கைது

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 3,283 பேரை கைது செய்ததாக இலங்கை போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தினைக்களம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச்... மேலும் பார்க்க