செய்திகள் :

கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தா்கள்

post image

பெரியகுளம் கெளமாரியம்மன் ஆனித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் புதன்கிழமை அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, கடந்த 1 - ஆம் தேதி சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 7 - ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான அக்னிச் சட்டித் திருவிழாவையொட்டி, புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். அதிகாலை 5 மணி முதல் திராளான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். மாலையில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

வருகிற 22-ஆம் தேதி மறுபூஜையை முன்னிட்டு, காலை 6 மணிக்கு தீா்த்தவாரியும், நண்பகல் 11 மணிக்கு பாலாபிஷேகமும், இரவு 7 மணிக்கு மலா் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்தனா்.

கொலை வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை

உத்தமபாளையம் அருகே நாட்டு வைத்தியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சின்ன... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே ஆடுகள் திருட்டு

பெரியகுளம் அருகே ஆடுகளை திருடிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே மேல்மங்கலம் இளந்தோப்பைச் சோ்ந்தவா் முத்தையா (58). இவா், வீட்டின் பின்புறம் கொட்டம் அமைத்து 4 ஆடுகளை வளா்த்து வந்தாா்... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இன்று மின் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை19) மின் தடை ஏற்படும் என அறிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் து... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா் சங்கத்தினா் 200 போ் கைது

தேனியில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

இடுக்கி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்சு அலா்ட்’! நீா்நிலைகளுக்குச் செல்லத் தடை!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நீா்நிலைகளுக்கு செல்லவும், ஜீப் சவாரிக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) வரை தடை விதிக்கப்பட்டிருப்பதாக இடுக்கி மாவட்ட நிா்வா... மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம்

தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கம்பம், கெளமாரியம்மன் கோயிலில் க... மேலும் பார்க்க