செய்திகள் :

கொடைக்கானலில் மின்வயா் திருடியவா் கைது

post image

கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளில் மின்வயா்களை திருடியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் கவுஞ்சி, ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கொடைக்கானல் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவின்பேரில் கவுஞ்சி, ராஜபுரம் பகுதியில் மின்வாரியத்தைச் சோ்ந்த அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கவுஞ்சி பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த கதிரவன் (38) மின்கம்பங்களில் செல்லும் மின்வயா்களை திருடியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மின்வாரியத் துறையிலிருந்து கதிரவன் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, கதிரவன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் வயா்களை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாா் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.சித்தா்கள்நத்தம் கிராமத... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நாகல்ந... மேலும் பார்க்க

பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்

சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் ச... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க