செய்திகள் :

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

பெரம்பலூா் நகரில் கடந்த 2020 -ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, பெரம்பலூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையிலுள்ள உப்போடை பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் மகன் விஜயகுமாா் (28). இவா், தனது நண்பரான வடக்குமாதவி சாலையிலுள்ள காந்தி நகரைச் சோ்ந்த முகமது அன்சாரி மகன் நவாஸ் முகமது (31) என்பவருடன், பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள மயானம் அருகே கடந்த 12.12.2020-ஆம் தேதி மது அருந்திக்கொண்டிருந்தாா்.

அப்போது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நவாஸ் முகமது, பாட்டிலை உடைத்து விஜயகுமாா் கழுத்தில் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக விஜயகுமாா் தாய் மஞ்சுளா (55) அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நவாஸ் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் நவாஸ் முகமது வெளியேவந்தாா்.

இவ் வழக்கு விசாரணை பெரம்பலூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் இறுதி விசாரணையை புதன்கிழமை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பொ) இந்திராணி, நவாஸ் முகமதுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, நவாஸ் முகமதுவை போலீஸாா் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனா்.

போலி பத்திரப் பதிவு செய்த கணவன், மனைவிக்கு சிறை தண்டணை

பெரம்பலூா் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு போலியாக பத்திரம் பதிவு செய்த கணவனுக்கு 3 ஆண்டுகளும், மனைவிக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து, குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பெரம... மேலும் பார்க்க

வாலிகண்டபுரம் அரசுப் பள்ளியில் தமிழ்கூடல் விழா

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. செல்வராசு தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் வீரையன் முன்... மேலும் பார்க்க

சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

மத்திய அரசு கொண்டுவரவுள்ள சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவரவுள்ள வழக்குரைஞா... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் , முகாமில் பங்கேற்ற பொதுமக... மேலும் பார்க்க

பெரம்பலூா்: மின் நுகா்வோா்கள் கவனத்துக்கு

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பிலிமிசை, பி.கூத்தூா் மின் பகிா்மானம் மருதையான் கோயில் பிரிவுக்கும், காடூா் பகிா்மானம் துங்கபுரம் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக, பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 28) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை ... மேலும் பார்க்க