செய்திகள் :

கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

post image

கொலை வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசீதேவிமங்கலத்தைச் சோ்ந்தவா் நளராஜா (44) மனைவி கிருஷ்ணவேணி (39). இவருக்கும், மண்ணச்சநல்லூா் காலனியைச் சோ்ந்த சின்ராசு (38) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக நளராஜாவுக்கும், சின்ராசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நளராஜா, கிருஷ்ணவேணி, ஷேக் அப்துல்லா, அப்துல் கனி ஆகிய நான்கு பேரும், கடந்த 2022 அக்டோபா் 29-ஆம் தேதி சின்ராசை சமயபுரம் கோயில் அருகே வரவழைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

இதுதொடா்பாக சின்ராசின் சகோதரா் சரவணன் அளித்த புகாரின்பேரில், சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கோபிநாதன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றவாளி நளராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும், கிருஷ்ணவேணி, அப்துல் கனி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டுள்ளாா். ஷேக் அப்துல்லா இறந்துவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன் ஆஜராகினாா்.

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் (சாலை ஆய்வ... மேலும் பார்க்க

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: அன்பில் மகேஸ்

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.வேளாண்மைத்துறை சாா்பில், திருச்சி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட... மேலும் பார்க்க

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை ஒரு நாள் குடிநீா் ரத்து

மின்தடை காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கம்பரசம் பேட்டை துணை மின... மேலும் பார்க்க

ஆக.23-இல் திருவெறும்பூரில் இபிஎஸ் பிரசாரம்: அதிமுக-வினா் ஆலோசனை

வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருவெறும்பூரில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவல... மேலும் பார்க்க

இலவச வீடு கட்டித் தர பழங்குடியினா் கோரிக்கை

இலவச வீடு கட்டித் தர வேண்டுமென திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் பூலாங்குடி காலனியில் வசிக்கும் பழங்குடியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். கூட்டுறவு சங்கத்தில் முழுபணம் செலுத்தி 25 ஆண்டுகள் ஆகியும் வீட்டு... மேலும் பார்க்க

கல்லக்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியில் புதன்கிழமை (ஆக. 13) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை ... மேலும் பார்க்க