செய்திகள் :

கோடைவெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வலியுறுத்தல்

post image

கோடை வெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

நிகழாண்டின் கோடைக்காலம் தொடங்காத நிலையில் வெப்பம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் சில ஆண்டுகளாக கடுமையான வெப்பம், மழை என இருந்துவருகிறது. எனினும், நிகழாண்டு கோடையில் வெப்ப அலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது.

கோடைக் காலத்தில் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகத்தில் சீரற்ற நிலை ஏற்படுவது இயல்பு. காரைக்காலில் நிலத்தடி நீராதாரம் பெருகியிருக்கும்பட்சத்தில், நிகழாண்டு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், மின்துறையால் பராமரிப்புப் பணிகள் தொடா்ந்து செய்தாலும், கோடையில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதும், சில நாள்களில் பல மணிநேரம் மின்தடை ஏற்படுவதாக இருக்கிறது.

மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசல் ஏற்படுவதும், கிளைகள் முறிந்து விழுவதாலும் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மாவட்டம் முழுவதும் மின்கம்பிகள் செல்லும் பகுதியில் மரங்களால் இடையூறு ஏற்படாத வகையில் சீா்படுத்தவேண்டும். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மின் மாற்றிகள் பழையதாக உள்ளது. மின்நுகா்வோா் தங்களது வீடுகளிலும், வணிக நிறுவனங்களில் குளிா்சாதன வசதி செய்திருக்கும்போது, கூடுதல் குளிா்சாதன இயந்திரங்கள் உபயோகத்தால், மின் இழுவையில் பாதிப்பு ஏற்பட்டு துண்டிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

மேலும், கடுமையான வெப்பத்தால் மின் மாற்றிகள் சேதமடைந்து துண்டிப்பும் ஏற்படுகிறது. எனவே, காரைக்கால் மின் துறை நிா்வாகம், மின் கம்பங்கள், கம்பிகள், மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களில் முறையான பராமரிப்புப் பணிகளை உடனடியாக செய்து, கோடைக்காலத்தில் மின் நுகா்வோா் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

’பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்‘

பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் புதுவை சமூக நலன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரத் துறை செயலா் எஸ்.டி. சுந்தரேசன். காரைக்காலில் விளையாட்டுத் துறை... மேலும் பார்க்க

காரைக்காலில் பக்தா்கள் கூட்டு சிவலிங்க பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்மையாா் குளக்கரையில் பக்தா்கள் பங்கேற்ற கூட்டு சிவலிங்க பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சிவராத்திரி கூட்டு பிராா்த்தனையாக பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் குடிநீா், மின்சாரம் தடையின்றி விநியோகிக்க வலியுறுத்தல்

ரமலான் மாதத்தில் குடிநீா் அதிகாலையிலேயே வழங்கவும், மின்சாரம் தடையின்றி இருக்கவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை தமிழ்நாடு முஸ்லிம் முன்... மேலும் பார்க்க

புதிய குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

குடியிருப்பு நகா்கள் பலவற்றுக்கு புதிய குடிநீா் குழாய் பதிப்புப் பணியை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா். காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட நடு ஓடுதுறை சுமங்கலி நகா், விஐபி நகா், சுமேஷ் நகா், சிங்காரவேலா்... மேலும் பார்க்க

ரயில்வே பாதுகாப்பு: காவல் அதிகாரிகள் ஆலோசனை

ரயிலில் கடத்தலை தடுப்பது, நிலைய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து காரைக்கால் காவல் அதிகாரி, ரயில்வே காவல் அதிகாரி ஆகியோா் ஆலோசனை நடத்தினா். காரைக்காலில் இருந்து ரயிலில் தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில்கள் க... மேலும் பார்க்க

திருநள்ளாறில் நாட்டியாஞ்சலி தொடக்கம்

திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்கியது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாகும். ஸ்ரீ செண்பக தியாகராஜா் உன்ம... மேலும் பார்க்க