செய்திகள் :

கோவா: நைட் கிளப்பில் தீ‌ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்‌பற்றியது எப்படி?

post image

நேற்று நள்ளிரவு, கோவா ஆர்போராவில் உள்ள ரோமியோ லேன் நைட் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 22 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

என்ன நடந்தது?

சிலிண்டர் வெடித்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தக் கிளப்பின் பேஸ்மென்ட் பகுதியில் பணிபுரிந்து வந்தவர்கள்.

அதிகாரிகள் கூறும் தகவலின்படி, இந்த விபத்தில் மூன்று பேர் மட்டுமே தீயில் எரிந்து இறந்திருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் மூச்சு திணறலால் இறந்துள்ளனர்.

விபத்து நடந்த கிளப்
விபத்து நடந்த கிளப்

முதலமைச்சர் என்ன கூறுகிறார்?

விபத்து ஏற்பட்ட கிளப்பை கோவாவின் முதலமைச்சர் பிரமோத் சவந்த் நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். இந்த விபத்து விதிமீறல்களால் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.‌ இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க பிரமோத் சவந்த் உத்தரவிட்டுள்ளார்.

ஒருவேளை இந்த விபத்து விதிமீறல்களால் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று எச்சரித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்‌ இந்திய பிரதமர் மோடி. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.

உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் ... மேலும் பார்க்க

கீழக்கரையில் கொடூர விபத்து: நகர்மன்ற தலைவர் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரி... மேலும் பார்க்க

MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: கண்மாயில் கவிழ்ந்த வேன்; பட்டாசு தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்தான், கோடாங்கிபட்டி, ஏ. ராமலிங்காபுரம் பகுதிகளில் இருந்து தனியார் பட்டாசுத் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு வேன் புறப... மேலும் பார்க்க

ECR: அரசுப் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி; தீவிர விசாரணையில் காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து இன்று (01.12.2025) அதிகாலையில், வேலைக்கு 20 பேரை ஏற்றிக்கொண்டு தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற... மேலும் பார்க்க

Accident: `திருப்பத்தூர் பேருந்து விபத்துக்கான காரணம் இதுதான்' - நடத்துனர் கொடுத்த தகவல்

காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க