செய்திகள் :

`கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?’ - உயர் நீதிமன்றம்

post image

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகளை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையத்தி்ல் வெளிப்படையாக வெளியிடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், ‘‘கோவில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தால் அதன்மூலமாக முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஏற்கெனவே வருவாய்துறையின் தமிழ் நிலம் என்ற இணைய தளம் வாயிலாக மாநிலத்தில் உள்ள நிலங்களின் வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் அறிய முடியும்’’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை

வழிப்பறி

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘நகைகளை அணிந்து சென்றால் திருடர்கள் வழிப்பறி செய்து விடுவார்கள் என்பதற்காக யாராவது தங்க நகை அணியாமல் செல்கிறார்களா? தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை ஏன் தயங்குகிறது? சொத்துக்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? கோவில்களின் சொத்துக்களை அனைவரும் தெரியும் வண்ணம் இதுபோல வெளியிடும்போது, நிலங்களை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லவா? மனுதாரர் அறநிலையத்துறையின் தணிக்கை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் என்கிறார். அதை வெளியிடுவதில் என்ன பிரச்னை உள்ளது? அறநிலையத்துறை கமிஷனரின் தனிப்பட்ட விவரங்களையோ, அதிகாரிகளின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என சொல்ல வில்லையே?’’ என்று சரமாரியாக கேள்விகளை கேட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்

பதில் மனு

பின்னர், ``மனுதாரர் கோரியுள்ள அனைத்து விவரங்களும் சட்ட ரீதியாக பொது ஆவணங்கள் ஆகும். அவற்றை வெளியிட முடியாது என மறுக்க முடியாது. எனவே, எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்ய முடியும்? எந்தெந்த தகவல்கள் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான பதில் மனுவை அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை நவம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

``கோமாவில் இறந்தவர், பாலிசி காலாவதியை ஏற்க முடியாது'' - மனைவிக்கு ரூ.1 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர் சரவணன் ரெங்கநாதன், தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி மதிப்... மேலும் பார்க்க

2-வது திருமணத்தை பதிவுசெய்ய முதல் மனைவி சம்மதம் வேண்டும்; கேரள ஐகோர்ட் கூறிய தீர்ப்பு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (44). 2017-ம் ஆண்டு காசர்கோட்டைச் சேர்ந்த ஆபிதா (38) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நில... மேலும் பார்க்க

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறையின் நடவடிக்கை சரியானதுதான் - PMLA உத்தரவு

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கியது சரியானதுதான் என்று 'பணமோசடி தடுப்புச்சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (PMLA) உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. அம... மேலும் பார்க்க

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? விவரம் கேட்கும் உயர்நீதிமன்றம்

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அரசுத்தரப்பில் விவரம் கேட்டுள்ளது .இந்து சமய அறநிலையத்துறைசேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ச... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.இதனையடுத்து, `சதுப... மேலும் பார்க்க

`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்... மேலும் பார்க்க