செய்திகள் :

கோவை பெரியார் நூலக கட்டத்தில் திருஷ்டி படம் - அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?

post image

கோவை காந்திரபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு செய்தார்.

கோவை பெரியார் நூலகம் திருஷ்டி படம்

இதனிடையே கட்டடத்தின் முன் பகுதியில் திருஷ்டி படம் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் பெயரை வைத்துக் கொண்டு மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் திருஷ்டி படம் வைத்தது சர்ச்சையானது.

இதற்கு தபெதிக இயக்கம் உள்ளிட்ட பெரியாரிஸ்ட்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எ.வ. வேலு, “பெரியார் நூலகம் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நூலகம் தரமாகவும், விரைந்து கட்டவும் ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எ.வ.வேலு

கட்டுமான பொருள்களின் தரம் குறித்து ஆய்வுக்காக, அரசு பொறியாளர்கள் நிரந்தரமாக இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒப்பந்ததாரர்களின் நம்பிக்கையில் திருஷ்டி படம் வைத்துள்ளனர். நான் பெரியாரிஸ்ட். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து எங்களிடம் வரும்போது, இதுபோன்ற பலகைகள் இருக்காது. நான் பகுத்தறிவாளன். இதுபோன்ற செயலை ஏற்பதில்லை.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

அவிநாசி மேம்பாலம் பணிகள் ஆகஸ்ட் 15 தேதிக்குள் நிறைவடையும். அங்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கான தேவை இருந்தால், அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.” என்றார்.

``இந்தியாவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் மதுரைக்கு கடைசி இடம்..'' - சு.வெங்கடேசன் வேதனை

"மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை, முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

``என் உயிருக்கு ஆபத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்'' - டிஎஸ்பி சுந்தரேசன்

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசன், அமைச்சர் மெய்யநாதன் எஸ்காட்டிற்கு வேண்டும் என தன் வாகனத்தை வாங்கி கொண்டனர். அதன் பின்னர் வாகனத்தை தராததால் அவர் நடந்தே அலுவலகம் செல்வது போன்ற வீடியோ வெளியா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இஸ்லாம்பூர் டு ஈஷ்வர்பூர் - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற நகரின் பெயரை ஈஷ்வர்பூர் என மாற்றியுள்ளது அந்த மாநில பாஜக அரசு. சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாளான நேற்று (18.07.2025) இந்த ... மேலும் பார்க்க

OPS: தடுமாறி நிற்கும் ஓபிஎஸ்? விஜய் பக்கமாக சாய்கிறாரா? - அடுத்தக்கட்ட மூவ் என்ன? | In Depth

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், ஒரு பெரும் சமூகப் பின்னணியைக் கொண்டவர் என ஓ.பி.எஸ்ஸூக்கு எத்தனையோ வலுவான அடையாளங்கள் இருந்தாலும், இன்றைய தேதிக்கு அவர் அரசியலில் தன்... மேலும் பார்க்க

Donald Trump: ``BRICS நாடுகளின் இறக்குமதிக்கு 10% கூடுதல் வரி..'' - ட்ரம்ப் மிரட்டுவது ஏன்?

வளரும் நாடுகள் கூட்டமைப்பான BRICS-ல் உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10% கூடுதல் வரி விதிப்பதாக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.இந்த கு... மேலும் பார்க்க

M.K.Muthu: கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.மு.க.முத்து - ஸ்டாலின் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து. பூக்காரி, பிள்ள... மேலும் பார்க்க