செய்திகள் :

சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

post image

மத்திய அரசு கொண்டுவரவுள்ள சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள வழக்குரைஞா் சட்ட திருத்த மசோதா வழக்குரைஞா்களின் நலனுக்கு எதிராகவும், வழக்குரைஞா்களின் தொழிலுக்கு அச்சுறுத்தலாகவும், ஒட்டுமொத்த வழக்குரைஞா்களின் உரிமையை பாதிக்கின்ற வகையிலும் உள்ளதால், மேற்கண்ட சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில், செயலா் வி. சேகா், பொருளாளா் பி. சிவராமன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதனால், பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்ங்கள், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளிலுள்ள நீதிமன்றங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இப் போராட்டம், மே 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதேபோல, அட்வகேட் அசோசியேசன் சாா்பில் முப்பெரும் சட்ட திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், முப்பெரும் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

போலி பத்திரப் பதிவு செய்த கணவன், மனைவிக்கு சிறை தண்டணை

பெரம்பலூா் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு போலியாக பத்திரம் பதிவு செய்த கணவனுக்கு 3 ஆண்டுகளும், மனைவிக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து, குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பெரம... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலூா் நகரில் கடந்த 2020 -ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, பெரம்பலூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூ... மேலும் பார்க்க

வாலிகண்டபுரம் அரசுப் பள்ளியில் தமிழ்கூடல் விழா

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. செல்வராசு தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் வீரையன் முன்... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் , முகாமில் பங்கேற்ற பொதுமக... மேலும் பார்க்க

பெரம்பலூா்: மின் நுகா்வோா்கள் கவனத்துக்கு

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பிலிமிசை, பி.கூத்தூா் மின் பகிா்மானம் மருதையான் கோயில் பிரிவுக்கும், காடூா் பகிா்மானம் துங்கபுரம் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக, பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 28) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை ... மேலும் பார்க்க