செய்திகள் :

'சம்பளமே வேண்டாம்; மக்களுக்காக வேலை செய்றோம்!' - போராடிய தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்த காவல்துறை!

post image

சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 அலுவலங்களின் அருகே சாலைகளை சுத்தம் செய்து போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் காவல்துறையினர்
தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் காவல்துறையினர்

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாக போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் வீடுகளில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, எக்மோர் மணியம்மை சிலை ஆகியவற்றின் அருகேயும் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகி வந்தனர். இந்நிலையில், இன்று மண்டலங்கள் 5,6 ஆகியவற்றின் அலுவலகங்கள் அருகே சாலைகளை சுத்தம் செய்து தங்களை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்
மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்

மழைக்காலம் வருவதால் மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு 31.07.2025 தேதிய நிலையிலேயே தங்களை பணியில் எடுக்குமாறு கோரினர். சம்பளம் கூடல் இல்லாமல் மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றும் கூறினர்.

சாலைகளை சுத்தம் செய்து போராடிய பெண் தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அரும்பாக்கம், மதுரவாயில் ஆகிய இடங்களில் உள்ள திருமண மண்டபங்களிலும் சமூக நலக்கூடங்களிலும் அடைத்து வைத்திருக்கின்றனர்.

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க