செய்திகள் :

``சர்தார் படேல் மீது மரியாதை இருந்தால், மோடி RSS-ஐ தடைசெய்ய வேண்டும்'' - கார்கே காட்டம்

post image

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி குஜராத்தில் இன்று (அக்டோபர் 31) அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

மேலும், தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படும் படேலின் பிறந்த நாள் உரையில், காங்கிரஸ் அவரின் கொள்கைகளை மறந்து சுயநலத்துடன் செயல்பட்டதாக மோடி விமர்சித்தார்.

சர்தார் வல்லபாய் படேல் சிலை - மோடி
சர்தார் வல்லபாய் படேல் சிலை - மோடி

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, ``வெளிப்படையாகச் சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட வேண்டும். இவை எனது தனிப்பட்ட கருத்துகள்தான்.

இருப்பினும், சர்தார் வல்லபாய் படேலின் கருத்துகளை உண்மையிலேயே மோடி மதிக்கிறார் என்றால், ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யும் முடிவை அவர் எடுக்க வேண்டும்.

நாட்டிலுள்ள எல்லாத் தவறுகளுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும்தான் காரணம்" என்று கூறினார்.

மேலும், வல்லபாய் படேல் குறித்துப் பேசிய கார்கே, ``காந்தியின் மரணத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்த விதத்திற்குப் பிறகு, அவர்களைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சியாமா பிரசாத் முகர்ஜிக்கு படேல் கடிதம் எழுதினார்.

ஆர்.எஸ்.எஸ் உரைகள் விஷம் நிறைந்தவை. காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு அவர்கள் இனிப்புகளை விநியோகித்தனர். இந்தக் கடிதத்தை கோல்வால்கருக்கும் படேல் எழுதினார்" என்று கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், 1948-ல் காந்தி மறைவுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடை செய்தார்.

அதன்பின்னர், 1975-ல் எமெர்ஜென்சியின்போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியாலும், 1992-ல் பாபர் மசூதி இடிப்பின்போது அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவாலும் ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டது.

இருப்பினும் தற்போது எந்தத் தடையும் இல்லாத ஆர்.எஸ்.எஸ், டெல்லியில் அக்டோபர் 1-ம் தேதி தனது நூற்றாண்டு விழா கொண்டாடியதும், அதில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

சட்ட விரோத குவாரி: அறப்போர் இயக்கம் முன்னெடுத்த கூட்டத்தில் புகுந்த குண்டர்கள்!? - என்ன நடந்தது?

அறப்போர் இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் சட்டவிரோத கல்குவாரியால் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை ஆவணப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் சிலர் நுழைந்து மிரட்டல் விடுத்ததாக அறப்போர் இயக்கம் குற... மேலும் பார்க்க

SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்ன? - முழு விவரம்

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள்... மேலும் பார்க்க

``SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக'' - திருமாவளவன் கடும் விமர்சனம்

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள... மேலும் பார்க்க

'தகுதிச்சான்றிதழ் பெற ரூ.20 லட்சம் லஞ்சம்' - பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். சரவணன் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சக வரலாற்றுத்துறை பேராசரியரான வெங்கடேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவ... மேலும் பார்க்க

SIR: "பாதகமான வாக்குகளை நீக்குகிறார்கள்" - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் செயல்படுத்தவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது திமுக அரசு.இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந... மேலும் பார்க்க