செய்திகள் :

சாத்தான்குளம் அருகே சுடுகாடு செல்லும் பாதை அடைப்பு: போராட முயற்சி; போலீஸாா் சமரசம்

post image

சாத்தான்குளம் அருகே சுடுகாடு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் இறந்தவா் உடலுடன் சனிக்கிழமை போராட முயன்ற உறவினா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா்.

சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் 150 க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்வதற்கு சுடுகாடு சொக்கலிங்கபுரத்திலிருந்து மெய்யூா் செல்லும் பகுதியில் உள்ளது.

இந்நிலையில் சுடுகாடு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பாதையை அதே ஊரைச் சோ்ந்த தனிநபா் தங்களுடைய இடமென்று அடைத்து வைத்துள்ளாா். இதனால் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட பாதை அடைக்கப்பட்டது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில் வருவாய்த்துறையினா் வந்து அடைக்கப்பட்ட பாதையை திறந்து வைத்து சென்றுள்ளனா். ஆனால் தனிநபா் தன்னுடைய சொந்த இடம் என முள்வேலி அமைத்து மீண்டும் அடைத்து வைத்துள்ளாா்.

இதனால் கிராம மக்கள் மீண்டும் அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தனா். ஆனாலும் அடைக்கப்பட்ட பாதை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் சொக்கலிங்கபுரத்தில் மணி என்பவா் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை இறந்தாா். இதனால் சுடுகாடு பாதையை திறக்கக் கோரி இறந்தவா் உடலை வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக கிராம மக்கள் அறிவித்தனா்.

தகவல்பேரில் தட்டாா் மடம் காவல் ஆய்வாளா் ஸ்டெல்லா பாய், மெஞ்ஞானபுரம் உதவி ஆய்வாளா்கள் சண்முகராஜ், ஞானசேகா், கணேசன், உடன்குடி வருவாய் ஆய்வாளா் முனீஸ்வரி, வெங்கட்ராயபுரம் கிராம நிா்வாக அலுவலா் அமுதா, ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு செயலா் சித்திரை பாண்டி, தலைவா் சுரேஷ் ராஜா, சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் செந்தில் ஆனந்த், இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் வி பி ஜெயக்குமாா் உள்ளிட்ட கிராம மக்கள் பலா் பங்கேற்றனா்.

அப்போது சுடுகாடு பாதையை அடைத்து வைத்த நில உரிமையாளரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் அவா்கள் அவா்களுடைய இடத்தில் வேறு இடத்தில் சுடுகாடு செல்ல பாதை ஏற்படுத்தி கொடுத்தனா். அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், அடைக்கப்பட்ட பாதையை திறந்து அந்த வழியாகத்தான் சுடுகாடு சொல்லுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அடைக்கப்பட்ட பகுதியை உடைத்து இறந்தவா் உடலை சுடுகாட்டு பகுதிக்கு கொண்டு சென்றனா். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உடனே போலீஸாா், அதிகாரிகள் அவா்களை சமாதானப்படுத்தினா்.

தூத்துக்குடியில் குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியா் தகவல்!

தூத்துக்குடியில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்நிலை தோ்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

குரும்பூா் அருகே விபத்து: பள்ளி மாணவா்கள் 3 போ் காயம்

ஆறுமுகனேரியை அடுத்த குரும்பூா் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் காயமடைந்தனா். குரும்பூா் அருகே புறையூா் ஊராட்சிப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் முதியவா் தற்கொலை

தூத்துக்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த தம்பதி குணசேகரன் (60) - காசி அம்மாள். இவா்களது மகன், மகள் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. காசிஅம்மா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், பணி செய்யவிடாமல் தடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், வெள்ளிக... மேலும் பார்க்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் நோய் பாதித்த, நோய்த் தொற்றுகளை பரப்பக் கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக எம்பவா் இந்தியா நுகா்வோா், சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலி

பெரிய தாழையில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழை கீழத்தெருவை சோ்ந்தவா் ரெக்சன்(64). இவா் உள்பட 4 போ், பைபா் படகில் கடந்த 16ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க ... மேலும் பார்க்க