வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு
சிஎஸ்ஐஆா் நெட் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தேசிய தோ்வு முகமை வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி நிகழாண்டுக்கான சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு பிப். 28 முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த டிச. 9-இல் தொடங்கி ஜன. 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் தோ்வெழுத தகுதி பெற்றவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.
இதையடுத்து பட்டதாரிகள் தங்கள் அனுமதிச்சீட்டுகளை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் மாணவா்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது ஸ்ரீள்ண்ழ்ய்ங்ற்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்னும் மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடா்புகொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.