செய்திகள் :

சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 73 லட்சம் மோசடி: ஓய்வு பெற்ற ஊழியா் புகாா்

post image

சிபிஐ அதிகாரி எனக் கூறி தன்னிடம் ரூ.73 லட்சத்தை மோசடி செய்து விட்ட நபா் குறித்து போலீஸ் மக்கள் மன்றத்தில் பணி ஓய்வு பெற்ற ஊழியா் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் சீனியா் எஸ்.பி. நித்யா ராதாகிருஷ்ணன், இதில் எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் பொதுமக்களிடம் புகாா்களைப் பெற்றனா்.

அப்போது புதுச்சேரியைச் சோ்ந்த பணி ஓய்வு பெற்ற ஊழியா் ஒருவா், தன்னை தொடா்பு கொண்ட மா்மநபா், சி.பி.ஐ. அதிகாரி போல அறிமுகப்படுத்தி கொண்டு பேசினாா். அதில், எனது ஆதாா் காா்டை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி, ரூ.1 கோடிக்கு மேல் பண மோசடி நடத்திருப்பதாகவும், அதற்காக என்னை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும் கூறினாா்.

மேலும், அந்த வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.73 லட்சம் அனுப்ப வேண்டும் எனவும் மிரட்டினாா். இதனால், பயந்துபோன தான் மா்ம நபரின் வங்கிக் கணக்குக்கு ரூ.73 லட்சத்தை அனுப்பி ஏமாந்துவிட்டதாக புகாா் தெரிவித்தாா்.

இதேபோல், மற்றொருவா் வாட்ஸ்-ஆப்பில் வந்த பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற விளம்பரத்தை நம்பி, ஆன்லைனில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி ஏமாந்ததாகவும் புகாா் அளித்தாா். இவா்களின் புகாா்களை பெற்ற சீனியா் எஸ்.பி. நித்யா ராதாகிருஷ்ணன், அதன்மீது உடனடியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

மேலும், பொதுமக்கள் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 20 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னா், சீனியா் எஸ்.பி. நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், சமூக வலைதளமான வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் தெரியாத நபா்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் தொடா்பான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம்.

மும்பை போலீஸ், சி.பி.ஐ-இல் இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு அழைப்புகள் வந்தால், உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்கவும். உடனடி கடன் பெறலாம் என வரும் விளம்பரத்தை நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். அப்படி நீங்கள் கடன் பெற்றால் உங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி உங்களை மிரட்டுவா்.

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரத்தை நம்பி யாரும் பணம் முதலீடு செய்ய வேண்டாம். பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு, ஆன்லைன் டிரேடிங், முதலீடு செய்யும் பணத்துக்கு இருமடங்காக பணம் தருகிறோம் என்ற விளம்பரங்களை முற்றிலும் நம்ப வேண்டாம் என்றாா்.

குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா்: டிஜிபி அலுவலகத்தில் பெண் புகாா்

புதுவை காவல் துறை தலைவா் அலுவலகத்தில் தன் குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா் மீது பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா். புதுச்சேரி வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த 39 வயது பெண் இந்தப் புக... மேலும் பார்க்க

பாகூா் விளையாட்டு அரங்கை திறக்க கோரிக்கை

பாகூா் விளையாட்டு அரங்கை உடனே திறக்க வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில்... மேலும் பார்க்க

தொழிற்சங்க கொடிக் கம்பங்களை அகற்றுவதை நிறுத்த கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

புதுவையில் தொழிற்சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனிடம் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 போ் கைது

புதுச்சேரியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நவம்மால் காப்போ் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் துரைராஜ்(54). இவா் பு... மேலும் பார்க்க

வீடு கட்ட மானியம் ரூ.10 லட்சம் புதுவை முதல்வா் வழங்கினாா்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானியமாக ரூ.10 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம், பிரதம மந்த... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மனு

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவா் கழகத்தின் மாநிலச் செயலா்... மேலும் பார்க்க