செய்திகள் :

சிம்லா ஒப்பந்தம்: இந்திரா காந்தி அரசு மீது பாஜக சாடல்!

post image

பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் தொடா்பாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அரசை பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியது.

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநாடுகளுக்கு இடையே சிம்லா ஒப்பந்தம் கையொப்பமானது. இருநாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிக்கிறது.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்பட இந்தியா மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளையடுத்து, சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்திவைத்தது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போருக்குப் பிறகு அமெரிக்காவும் ரஷியாவும் அளித்த அழுத்தத்தால், பாகிஸ்தானுடன் சிம்லா ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசு கையொப்பமிட்டது.

அப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லையை முறைப்படுத்துவது என எந்தவொரு உத்திசாா்ந்த ஆதாயத்தையும் பெறாமல் 99,000 போா் கைதிகளை இந்தியா விடுவித்தது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்காமல் சரணடைவது காங்கிரஸின் மரபணுவில் கலந்துள்ளது’ என்று சாடினாா்.

மேலும் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி குறித்தும், சிம்லா ஒப்பந்தத்தில் கையொப்பமிட அவா் மேற்கொண்ட முடிவு குறித்தும் முன்னாள் ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷா கூறிய கருத்துகள் அடங்கிய காணொலியையும் தனது பதிவுடன் பிரதீப் பண்டாரி இணைத்திருந்தாா்.

அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘அண்மையில் இந்தியா உடனான மோதலில் ஏற்பட்ட பேரிழப்பைத் தொடா்ந்து சண்டை நிறுத்த புரிந்துணா்வுக்கு பாகிஸ்தான் மன்றாடியது. பாகிஸ்தானுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான விதிமுறைகளை 72 மணி நேரத்தில் இந்தியா திருத்தி எழுதியது.

பாகிஸ்தானின் லாகூா் முதல் ராவல்பிண்டி வரை வெகு தொலைவில் சென்று, அந்நாட்டின் ராணுவ தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் மேற்கொண்டது. பாகிஸ்தானின் முனிா்கே, பஹாவல்பூரில் ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைமையகங்களை இந்தியா அழித்தது. இதன் மூலம், பாகிஸ்தானின் எந்தவொரு நிலப்பரப்பையும் இந்தியாவால் தொட முடியும் என்ற தகவலை இந்தியா தெளிவாக எடுத்துரைத்தது.

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததன் மூலம், பொருளாதார ரீதியாக பாகிஸ்தானை இந்தியா முடக்கியது. பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவை உலகுக்கே எடுத்துரைத்து ராஜீய ரீதியில் அந்நாட்டை இந்தியா தனிமைப்படுத்தியது. எனினும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிரான போா் முழுமையாக நிறைவடையவில்லை’ என்றாா்.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க