செய்திகள் :

சிரியா - இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் ஏற்பு! அமெரிக்கா அறிவிப்பு!

post image

சிரியா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர, இருநாட்டு தலைவர்களும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

சிரியாவில் துரூஸ் இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவுக்கும், பொதூயின் ஆயுதக்குழுவுக்கும் இடையில், ஸ்வேடா மாகாணத்தில் நடைபெற்ற மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டின் இடைக்கால அரசின் ராணுவப் படைகள் தலையிட்டது.

இதனைத் தொடர்ந்து, துரூஸ் ஆயுதக்குழுவுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் மோதல் துவங்கிய நிலையில், துரூஸ் படைக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல்-ஷரா ஆகியோர் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக, துருக்கி நாட்டின் அமெரிக்க தூதர் டாம் பராக் கூறியுள்ளார். இந்த போர்நிறுத்தம் கொண்டு வர துருக்கி மற்றும் ஜோர்டான் அரசுகளும் தலையிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் டாம் பராக் வெளியிட்ட பதிவில், “நாங்கள் துரூஸ், பெதூயின் மற்றும் சன்னி பிரிவினரை உடனடியாக அவர்களது மோதல்களை முடித்துக்கொண்டு, அமைதியை நிலைநாட்ட வலியுறுத்துகின்றோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, துரூஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக, ஜூலை 16 ஆம் தேதி சிரியாவின் தலைநகரில் உள்ள ராணுவ தலைமையகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டடங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியா - பாக். மோதலில் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் டிரம்ப்!

The US government has announced that the leaders of the two countries have agreed to a ceasefire to end Israel's attacks on Syria.

நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கு காங்கோ, ருவாண்டா கிளா்ச்சியாளா்கள் ஒப்புதல்

காங்கோ, ருவாண்டா ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கிழக்கு காங்கோவில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கான கொள்கை பிரகடனத்தில் கையொப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கா... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்

கீவ்: ரஷியாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைன் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்த... மேலும் பார்க்க

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹா லாங் விரிகுடாவில் 50 பேருடன் சனிக்கிழமை பிற்பகல் சென்ற சுற்றுலாப் படகு திடீரென இடியுடன் கூடிய ... மேலும் பார்க்க

ஈரானில் பேருந்து விபத்தில் 21 பேர் பலி, 34 பேர் காயம்

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஷிராஸில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். உ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், ஹாங்கு மாவட்டத்தின்... மேலும் பார்க்க

நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் நின்றுக்கொண்டு பேசிய செய்தியாளர் ஒருவர், அந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகிஸ்தான் நாட்டில், கடந்த சில வாரங்களாகவே ... மேலும் பார்க்க