செய்திகள் :

சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி தனது தாயுடன், வந்தவாசி பகுதியிலுள்ள தர்காவுக்குச் சென்றுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடன் தர்காவிலேயே தங்கினார். இந்த நிலையில், அங்குவந்திருந்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா (25), அவரின் கணவனும் லாரி ஓட்டுநருமான இம்ரான்பாஷா (28), இவரின் கிளீனர் அஜ்மல் பாஷா (27) ஆகியோர் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்திருக்கின்றனர். அப்போது, `பெங்களூருவில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு போகணும்’ என்று சிறுமி கூறியதாக தெரிகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட லாரி

இதையடுத்து, சிறுமியை பெங்களூரு அழைத்துசெல்வதாக கூறி, பாத்திமா தன்னுடன் ஆற்காடுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கிருந்து லாரி மூலமாக அவரின் கணவன், கிளீனர் ஆகியோருடன் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த இருவரும் லாரியில் சிறுமியை அழைத்துசென்றபோது, சிறுமியிடம் பாலியில்ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டிருக்கின்றனர். பின்னர், நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

பொதுமக்களால் மீட்கப்பட்டு, மகளிர் பாதுகாப்பு இல்ல விடுதியில் தங்க வைக்கப்பட்ட சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. விடுதி கண்காணிப்பாளர் உடனடியாக சிறுமியை மீட்டு பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். அங்கு பரிசோதனை செய்தபோதுதான் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதையடுத்து, பெங்களூரு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேர்

அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு வந்தவாசி காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸார் `போக்சோ’ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, பாத்திமா, அவரின் கணவன் இம்ரான்பாஷா, கிளீனர் அஜ்மல் பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்திருக்கின்றனர். லாரியையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு - கலைச்செல்வி ஆகியோரது மகள் சீதாலட்சுமி(வயது:19). இவர், திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில... மேலும் பார்க்க

'பட்டாவுக்கே ரூ. 5,000 வாங்குறோம்; மணலுக்கு ரூ. 50,000 கொடுங்க!' - பேரம் பேசிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மணல் வியாபாரியிடம், 'நீங்கள் மண் அள்ளுவதற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க எனக்... மேலும் பார்க்க

வாலாஜாபேட்டை: தாசில்தார் காருக்கு தீ வைப்பு; நள்ளிரவில் பீதியைக் கிளப்பிய இளைஞன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாசில்தார் அலுவலகத்தின் போர்டிகோ வாயிலில் நிறுத்திவைக்கப்பட்ட தாசில்தார் பயன்படுத்தும் `அரசு வாகனம்’ நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவெனப் பரவிய பிறகே... மேலும் பார்க்க

"கோவை சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை" - ஐ.ஜி ரம்ய பாரதி அதிர்ச்சித் தகவல்

கோவை சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்ய பாரதி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்ப... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை: சாக்லேட் தந்து சிறுமியை அழைத்து சென்று கொலை; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

கரூர்: விவசாயி மீது நாட்டு துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு; 'நிலப் பிரச்னையா?' - போலீஸ் விசாரணை

கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் கருணகிரி (48). விவசாயத் தொழிலாளியான இவர... மேலும் பார்க்க