செய்திகள் :

சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி தனது தாயுடன், வந்தவாசி பகுதியிலுள்ள தர்காவுக்குச் சென்றுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடன் தர்காவிலேயே தங்கினார். இந்த நிலையில், அங்குவந்திருந்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா (25), அவரின் கணவனும் லாரி ஓட்டுநருமான இம்ரான்பாஷா (28), இவரின் கிளீனர் அஜ்மல் பாஷா (27) ஆகியோர் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்திருக்கின்றனர். அப்போது, `பெங்களூருவில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு போகணும்’ என்று சிறுமி கூறியதாக தெரிகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட லாரி

இதையடுத்து, சிறுமியை பெங்களூரு அழைத்துசெல்வதாக கூறி, பாத்திமா தன்னுடன் ஆற்காடுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கிருந்து லாரி மூலமாக அவரின் கணவன், கிளீனர் ஆகியோருடன் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த இருவரும் லாரியில் சிறுமியை அழைத்துசென்றபோது, சிறுமியிடம் பாலியில்ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டிருக்கின்றனர். பின்னர், நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

பொதுமக்களால் மீட்கப்பட்டு, மகளிர் பாதுகாப்பு இல்ல விடுதியில் தங்க வைக்கப்பட்ட சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. விடுதி கண்காணிப்பாளர் உடனடியாக சிறுமியை மீட்டு பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். அங்கு பரிசோதனை செய்தபோதுதான் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதையடுத்து, பெங்களூரு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேர்

அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு வந்தவாசி காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸார் `போக்சோ’ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, பாத்திமா, அவரின் கணவன் இம்ரான்பாஷா, கிளீனர் அஜ்மல் பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்திருக்கின்றனர். லாரியையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க