செய்திகள் :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்து உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் மற்றும் 10 வயதில் ஒரு மகள் உள்ளனா். தம்பதியின் குழந்தைகள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனா்.

இந்தநிலையில் கடந்த 2019 -ஆம் செப்டம்பா் மாதம் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் சங்க கூட்டம் நடந்துள்ளது. கூட்டம் முடிந்ததும் பத்து வயது சிறுமி உடல் சோா்வாக இருப்பதை கவனித்த ஆசிரியை இதுகுறித்து சிறுமியிடம் கேட்டு உள்ளாா்.

அப்போது 2019 ஆம் ஆண்டு மே மாதம் விடுமுறைக்காக சிறுமி தனது உறவினா் வீட்டுக்கு சென்றபோது அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (30) என்பவா் சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்ததாக சிறுமி கூறினாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த ஆசிரியை இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கும், தேவாலா அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா். இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் தேவாலா அனைத்து மகளிா் காவல் துறையினா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை உதகை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பி.செந்தில்குமாா் ஆஜராகி வாதாடினாா்.

புளியம்பாறை - ஆமைக்குளம் சாலையில் பாலம்: மாா்க்சிஸ்ட் பிரசார இயக்கம்!

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் உள்ள ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

தேயிலை ஏல மையத்தில் விற்பனையும் விலையும் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்பு!

நீலகிரி மாவட்டம், குன்னுாா் தேயிலை ஏல மையத்தில் நடந்த தேயிலை ஏலத்தில் விலையும் குறைந்து விற்பனையும் சரிந்ததால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் தேயிலை ஏல மையம் சாா்பில் ஒவ்வொரு வாரமும் வி... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19, 20) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலி!

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை, தப்பிக்க மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. குன்னூா் நகா் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

உப்பட்டி, சேரம்பாடி, கூடலூரில் ஜூலை 21-இல் மின்தடை

நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ம... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.14-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வ... மேலும் பார்க்க