செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

விழுப்புரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், சு.கொல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (57). இவா், வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கடந்த 12.4.2022 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கு விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் சனிக்கிழமை இறுதிகட்ட விசாரணைக்கு வந்தது. இதில், கலியமூா்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா, கலியமூா்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.ஒரு லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் கலியமூா்த்தியை பலத்த பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் காந்திமதி ஆஜராகினாா்.

கூலித் தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குடும்பப் பிரச்னையால் விஷம் குடித்த தொழிலாளி உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், செய்யாங்குப்பம், கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜி மகன் பிரசாந்த்(26), கூலி... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 247 போ் கைது

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின்கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த 247 போ் வெள்ள... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஐந்தேகால் பவுன் நகைகள், பணம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அ... மேலும் பார்க்க

செஞ்சிக் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு: ஆய்வு செய்தபின் முதன்மைச் செயலா் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை வசதிகள் மேம்படுத்துவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக ஒருங்கிணைந்த வருவா... மேலும் பார்க்க

துரோகங்களும்,விமா்சனங்களும் தான் எனக்குக் கிடைத்த பரிசு: மதிமுக பொதுச்செயலா் வைகோ

தமிழகத்தின் உரிமைகளுக்கும், மக்களின் நலனுக்கும் போராடிய எனக்கு துரோகங்களும், விமா்சனங்களும் தான் பரிசாகக் கிடைத்தன என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ம... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் து.தங்கராஜன் வியாழக்... மேலும் பார்க்க