செய்திகள் :

சிவகாசி: வீட்டில் பிரசவம் பார்த்த அசாம் தம்பதி; செவிலியரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை; என்ன நடந்தது?

post image

சிவகாசியில் சாரதா நகர் பகுதியில் வசிப்பவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஜூலில் - அஷ்மா காத்துன் தம்பதி. சிவகாசியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை பார்த்து வரும் இவர்களுக்கு ஏற்கனவே 9 வயது, 7 வயது, 5 வயது 3 வயதில் 4 குழந்தைகள் உள்ள நிலையில் 5வது முறையாக அஷ்மா காத்துன் கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியான அஷ்மா காத்துனுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டில் வைத்து அவராகவே பிரசவம் பார்த்துள்ளார். அவர்களுக்கு 5வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

அப்துல் ஜூலில்
அப்துல் ஜூலில்

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுகாதார துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த கங்காகுளம் பகுதி கிராம சுகாதார செவிலியர் கிரேஸ் வீட்டில் வைத்து பிரசவம் நடந்ததை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தாய், சேய் இருவரையும் ஆட்டோவில் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்து பிரசவம் நடந்தது போல் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தாய் மற்றும் குழந்தை தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகாசி மருத்துவமனை
சிவகாசி மருத்துவமனை

சம்பவமறிந்த சுகாதார துறை அதிகாரிகள் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த பெண்ணின் கணவர் அப்துல் ஜூலிலை விசாரித்தபோது, ஏற்கனவே பிறந்த தங்களது குழந்தைகள் நான்கு பேரையும் அசாமில் இருந்தபோது வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்ததாகவும், அந்த வகையில் 5வது குழந்தையும் தானே பிரசவம் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரைக் கண்டித்ததுடன், கங்காகுளம் கிராம சுகாதார செவிலியர் கிரேஸ் என்பவரைப் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து சிவகாசி சுகாதார துணை இயக்குநர் ஜெகவீர பாண்டியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க