செய்திகள் :

சூறைக்காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

post image

முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியதால் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் சனிக்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியது.

அப்போது, முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி வழியாக தஞ்சாவூா் செல்லும் சாலையில் பெரிய புளிய மரம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

இந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த முதுகுளத்தூா் தீயணைப்பு மீட்புப் படையினா் அங்கு சென்று மரத்தை சிறு துண்டுகளாக வெட்டி அகற்றினா்.

செம்மண்குண்டு ஊருணியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊருணியில் கழிவு நீரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் நகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இதில் நகரா... மேலும் பார்க்க

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேருந்து நிலையத்துக்கு பட்டுக்கோட்டை, மீமசல், ராமேசுவரம், அறந்தாங்கி, ராமநாதபுர... மேலும் பார்க்க

வனத் துறை காப்பு நிலத்தில் மதுப்புட்டிகள் அகற்றம்

ராமேசுவரம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்பு நிலத்திலிருந்து நெகிழி, மதுப்புட்டிகளை சனிக்கிழமை அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் வனத் துறைக்கு சொந்தமான காப்... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

பரமக்குடியில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளியை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சித்த... மேலும் பார்க்க

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்: 3,283 போ் கைது

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 3,283 பேரை கைது செய்ததாக இலங்கை போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தினைக்களம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச்... மேலும் பார்க்க