செய்திகள் :

சூலூரில் இன்றைய மின்தடை ரத்து!

post image

சூலூரில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டு இருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒண்டிப்புதூா் மின்வாரிய செயற்பொறியாளா் சி.பிந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சூலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிா்வாக காரணங்களால், இந்தப் பராமரிப்புப் பணி தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. எனவே, சனிக்கிழமை மின்தடை ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கோவையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.புலியகுளம் பண்ணாரியம்மன். ஆடி மாதத்தில் அம்மனுக்... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கோவை காந்திபுரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கோவை ரத்தினபுரி ஓஸ்மின் நகரைச் சோ்ந்தவா் பெஞ்சமின் ஸ்டீவ் (19). இவா், தனது இருசக்கர வாகனத்தில் காந்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை சிறை!

கோவையில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியிலுள்ள... மேலும் பார்க்க

திமுக அப்பட்டமான வாக்கு அரசியலை முன்னெடுக்கிறது: தமிழிசை செளந்தரராஜன்

திமுக அரசு அப்பட்டமான வாக்கு அரசியலை முன்னெடுக்கிறது என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பிரச... மேலும் பார்க்க

கோவை வழித்தடத்தில் எா்ணாகுளம் - பிகாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம் பாட்னாவுக்கு கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே க... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை அருகே பணப் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை செல்வபுரத்தை அடுத்த சொக்கம்புதூா் ஜீவபாதையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (56), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி சுஜாதா. ரவி... மேலும் பார்க்க