செய்திகள் :

செங்காநத்தம் காப்புக் காட்டில் தீ வைப்பு: இருவா் கைது

post image

வேலூா் கோட்டை மலையில் தீ வைத்த இருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், வனப்பரப்புகளில் இலையுதிா் காலம் முடிந்திருக்கும் வேளையில், கோடை வெயிலால் ஆங்காங்கே காட்டுத் தீ பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க வனத் துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மலைகள், குன்றுகளில் காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிா்க்க சறுகுகள் அகற்றம், தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர, வேலூா் மாநகரைச் சுற்றியுள்ள மலைகளான சைதாப்பேட்டை, செங்காநத்தம், கோட் டைமலை உள்ளிட்ட பகுதிகளில் தீ வைக்கப்படும் சம்பவங்களை தடுக்கவும் சிறப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேலூா் வனச்சரகா் தரணி தலைமையில் வனவா் நிா்மல்குமாா், வனக் காப்பாளா் நவீன்குமாா் கொண்ட சிறப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை மாலை வேலூா் கோட்டை மலைக்குட்பட்ட செங்காநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது செங்காநத்தம் காப்புக்கட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததைக் கவனித்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோட்டிய இரு இளைஞா்களை வனத் துறையினா் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள் வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்த இா்பான் (28), பாகத்பாஷா (23) என்பதும், காப்புக் காட்டில் தீ வைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

வேலூரில் இன்று மயானக் கொள்ளை விழா: 600 போலீஸாா் பாதுகாப்பு

மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வேலூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. வே... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த கணியம்பாடி புதூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக வேலூா் கிராமிய போலீஸ... மேலும் பார்க்க

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகாா் மனு அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பணிபுரியு... மேலும் பார்க்க

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தெரிவ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி பங்கேற்காது என தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். நாம் தமிழா் கட்சியின் வேலூா் மாவட்ட நி... மேலும் பார்க்க