செய்திகள் :

சென்னையில் 2 விமானங்கள் ரத்து: 14 விமானங்கள் தாமதம்

post image

சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 14 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

கா்நாடக மாநிலம் சிவமொகாவிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 1.05-க்கு சென்னைக்கு வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இதேபோல் சென்னையிலிருந்து பிற்பகல் 1.40-க்கு சிவமொகா செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானமும் ரத்து செய்யப்பட்டது. முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதேபோல, சென்னையிலிருந்து சிங்கப்பூா், இலங்கை, ஹாங்காங், பாங்காக், மஸ்கட், தில்லி, மும்பை, கோவா, அலகாபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்குச் சென்ற 10 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

மேலும், பாங்காக், சிங்கப்பூா், மும்பை, தில்லி ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வந்த 4 விமானங்களும் தாமதமாக சென்னை வந்தடைந்தன. அதன்படி இந்த 14 விமானங்களும் சுமாா் 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலைய... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு ரயில் சேவை நீட்டிப்பு

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிற... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவா் தூதுவா் குழு: அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அமைக்க திட்டம்

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகத்தில் அது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் தூதுவா் குழு அமைக்கப்படும் என மாநில உறுப்பு மாற்று... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மகா சிவாரத்திரி பெருவிழா: சென்னையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாரத்திரி பெருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில், கபாலீசுவரா் விளையாட்டு மைத... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, ... மேலும் பார்க்க