செய்திகள் :

சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?

post image

சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது மெயின் சாலையில் உள்ள அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் நவீன்குமார் (38). இவரின் மனைவி நிவேதிதா. இந்த தம்பதியினரின் மகன் லவின் (7). இவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நவீன்குமார், தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நிவேதிதா, ரயில்வேயில் வேலைப்பார்த்து வருகிறார். நவீன்குமாரின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த நவீன்குமாரின் பெற்றோர், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது நிவேதிதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சிறுவன் லவின் இறந்து கிடந்தார். அதைப்பார்த்த நவீன்குமாரின் பெற்றோர், சத்தம் போட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு நிவேதிதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சடலம்
சடலம்

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீஸார், அங்கு வந்தனர். சிறுவன் லவினின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் நவீன்குமார் இல்லாததால் அவர் எங்கு சென்றார். லவினுக்கும் நிவேதிதாவுக்கும் என்ன நடந்தது என போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில் வில்லிவாக்கம் - கொரட்டூர் ரயில் நிலையங்களுக்கிடையே இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பெரம்பூர் ரயில்வே போலீஸார் அங்கு சென்று சடலமாக கிடந்த இளைஞரின் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் அருகில் உடைந்த நிலையில் கிடந்த செல்போனை மீட்ட போலீஸார், அதன் மூலம் இளைஞரின் அடையாளத்தை கண்டறிந்தபோது உயிரிழந்தது நவீன்குமார் என்று தெரியவந்தது. உடனடியாக இந்தத் தகவலை ரயில்வே போலீஸார், திருமங்கலம் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர். அதன்பேரில் திருமங்கலம் போலீஸார், நவீன்குமார், நிவேதிதா ஆகியோரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து திருமங்கலம், ரயில்வே போலீஸார் ஆகியோர் கூறுகையில்,

``மத்திய அரசு அதிகாரியான நவீன்குமார், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் முதலீடு செய்த பணத்தை இழந்திருக்கிறார். கடன் சுமை, மன உளைச்சலால் நவீன்குமார், சிரமப்பட்டு வந்திருக்கிறார். அதனால் உயிரை மாய்த்துக் கொள்ள நவீன்குமார் முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து நிவேதிதாவிடம் நவீன்குமார் கூறியிருக்கிறார். இதையடுத்து சம்பவத்தன்று தன்னுடைய மகனான லவினின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் நவீன்குமார்.

கொலை
கொலை

பின்னர் மனைவி நிவேதிதாவின் கழுத்தையும் அறுத்திருக்கிறார். அப்போது நிவேதிதா உயிருக்குப் போராடியிருக்கிறார். அதைப் பார்க்க முடியாத நவீன்குமார் வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். பின்னர்தான் அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்திருக்கிறார். நிவேதிதாவிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும். தற்போதுள்ள சூழலில் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. நிவேதிதா, நவீன்குமாரின் செல்போன்களை ஆய்வு செய்து வருகிறோம். இவர்களின் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளோம். விசாரணைக்குப்பிறகுதான் முழு விவரம் தெரியவரும்" என்றனர்.

சென்னை அண்ணாநகரில் ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் உயிருக்கு போராடும் சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க

`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒர... மேலும் பார்க்க