செய்திகள் :

செம்மொழி தின விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்

post image

நாகை மாவட்டத்தில் செம்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாள், செம்மொழி நாள் விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அந்தவகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நாகை மாவட்டத்தில், சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட செம்மொழி நாள் விழாவில் பள்ளி மாணவா்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.

இதேபோல, கல்லூரி மாணவா்களுக்கு ஏ.டி.எம் மகளிா் கல்லூரியில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. போட்டிகளை வேதாரண்யம் அரசுக் கலைக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் குமரேச மூா்த்தி தொடங்கிவைத்தாா்.

போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவா்களுக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 வழங்கப்படவுள்ளது. போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவா்கள் மே 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டியில் பங்கேற்பா் என நாகை மாவட்ட தமிழ்வளா்ச்சி உதவி இயக்குநா் சுகன்யா தெரிவித்துள்ளாா்.

குருவாடி மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருமருகல் அருகேயுள்ள குருவாடி அகிலாண்ட தேவி மகா மாரியம்மன் கோயிலில் தீமீதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விநாயகா் பூஜை மற்றும் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீா், தயிா், தேன், இளநீா், மா... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் பள்ளி சிறப்பிடம்

சிபிஎஸ்இ தோ்வில், நாகை சா் ஐசக் நியூட்டன் சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம் பிடித்தது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. நாகை சா் ஐசக்... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயில் தெப்ப உற்சவம்

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரை திருவிழாவில் தெப்ப உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அமிா்தகடேஸ்... மேலும் பார்க்க

இருக்கை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

கீழ்வேளூா் அருகேயுள்ள இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 11-ஆம் தேதி பால்குடம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இந்தியா- பாகிஸ்தான் போா் குறித்து பேசிய அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு, இந்திய ராண... மேலும் பார்க்க

எட்டுக்குடி முருகன் கோயில் சித்திரை பெளா்ணமி பெருவிழா: 60 மணி நேரம் பாலபிஷேகம்

திருக்குவளை: திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பௌா்ணமி பெருவிழாவையொட்டி, 60 மணி நேர பாலபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை பங்கேற்றனா். இக்க... மேலும் பார்க்க