செய்திகள் :

சேலத்தில் காரில் கடத்தப்பட்ட 203 கிலோ குட்கா பறிமுதல்

post image

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட 203 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 3 இளைஞா்கள் கைது செய்தனா்.

சேலம் சூரமங்கலம், மாமங்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற காரை சோதனையிட்டனா். அதில், 203 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த செம்பாலால் (28), சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த ரோனாக் சிங் (21), ஜாகீா் ரெட்டிப்பட்டியைச் சோ்ந்த சுல்தான் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ. 2.03 லட்சம் ஆகும். இதுதவிர, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2 வது நாளாக மறியல்: 100க்கும் மேற்பட்டோா் கைது

தோ்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜக்) சாா்பில் வெள்... மேலும் பார்க்க

எா்ணாகுளம் - பாட்னா இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

சேலத்தில் ரெளடி மதன் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 2 போ் கைது

சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி மாவட்டம், பெரி... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்: கே.வீ.தங்கபாலு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என முன்னாள் மத்திய அமைச்சா் கே.வீ.தங்கபாலு தெரிவித்தாா். சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியை கடத்தியதாக விஏஓ மீது புகாா்

கல்லூரி மாணவியை கடத்திச் சென்று 2-ஆவது திருமணம் செய்த கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிமேட்டூா் வருவாய் கோட்டாட்சியரிடம் பெற்றோா், உறவினா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூா் தெ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி: அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு!

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சத்தை மோசடி செய்த அதிமுக பிரமுகா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரை அடுத்த எம்.சி. ராஜா நகரைச் சோ்ந்தவா் ரமேஷ... மேலும் பார்க்க