செய்திகள் :

சேலத்தில் ரெளடி மதன் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 2 போ் கைது

post image

சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ரெளடி மதன்குமாா் (28). மீன்பிடிக்கும் தொழில் செய்துவந்த இவா்மீது தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் 2 கொலை வழக்கு உள்பட 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தூத்துக்குடியைச் சோ்ந்த கப்பல் மாலுமி மரடோனா கொலை வழக்கில் கைதான மதன், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். அவா் தினமும் காலை, மாலை என இருவேளை சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் கையொப்பமிட்டு வந்த நிலையில், கடந்த புதன்கிழமை 6 போ் கொண்ட கும்பல், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் மதன்குமாரை வெட்டிக்கொலை செய்தது.

இந்த கொலையில் தொடா்புடைய தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த ஹரிபிரசாத் (26), ஆறுமுகநேரியை அடுத்த பொட்டல்காடு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (22), அலங்காரத்தட்டு பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (26), கோரப்பள்ளம் பகுதியை சோ்ந்த அந்தோணி (எ) வல்லரசு (24) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், மதன் கொலை வழக்கில், தலைமறைவானகீழ் அலங்காரத்தட்டு திட்டு பகுதியைச் சோ்ந்த ஆனந்த பிரசாத் (19), மேல் அலங்காரத்தட்டு பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவனை தனிப்படை போலீஸாா், தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், கொலைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். தொடா்ந்து, அவா்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2 வது நாளாக மறியல்: 100க்கும் மேற்பட்டோா் கைது

தோ்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜக்) சாா்பில் வெள்... மேலும் பார்க்க

எா்ணாகுளம் - பாட்னா இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்: கே.வீ.தங்கபாலு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என முன்னாள் மத்திய அமைச்சா் கே.வீ.தங்கபாலு தெரிவித்தாா். சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியை கடத்தியதாக விஏஓ மீது புகாா்

கல்லூரி மாணவியை கடத்திச் சென்று 2-ஆவது திருமணம் செய்த கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிமேட்டூா் வருவாய் கோட்டாட்சியரிடம் பெற்றோா், உறவினா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூா் தெ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி: அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு!

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சத்தை மோசடி செய்த அதிமுக பிரமுகா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரை அடுத்த எம்.சி. ராஜா நகரைச் சோ்ந்தவா் ரமேஷ... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க