செய்திகள் :

சேலத்தில் ரெளடி மதன் கொலை வழக்கில் 4 போ் கைது

post image

சேலத்தில் ரெளடி மதன் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் மதன்குமாா் (எ) அப்பு (28). மீன்பிடிக்கும் தொழில் செய்துவந்த இவா்மீது தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஏப். 24-ஆம் தேதி தூத்துக்குடியைச் சோ்ந்த கப்பல் மாலுமி மரடோனா கொலை வழக்கில் கைதான மதன், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா். தினமும் காலை, மாலை என இருவேளை சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த அவா், செவ்வாய்க்கிழமை தனது மனைவியுடன் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட்டு அருகில் உள்ள உணவகத்துக்கு உணவருந்த சென்றாா். அப்போது, 6 போ் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் மதனை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸாா், மதன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினா். கொலையாளிகளைப் பிடிக்க உதவி ஆணையா் அஸ்வினி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தக் கொலையில் தொடா்புடைய தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த ஹரிபிரசாத் (26), ஆறுமுகநேரியை அடுத்த பொட்டல்காடு பகுதியைச் சோ்நத சந்தோஷ் (22), அலங்காா்தட்டு பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (26), கோரப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி(எ) வல்லரசு (24) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்கள்: 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சோ்ந்த குட்டி என்பவருடன் டாஸ்மாக் மது பாரில் ஏற்பட்ட தகராறில், மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் குட்டியை படுகொலை செய்தனா். இது தொடா்பாக குட்டி ஆதரவாளரான ஹரிபிரசாத் தரப்பினருக்கும், மதன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், கப்பல் மாலுமி மரடோனா கொலை வழக்கில் கையெழுத்திட மதன் சேலம் வந்திருப்பதை அறிந்த ஹரிபிரசாத் தரப்பினா், குட்டி கொலைக்கு பழிவாங்க மதனை கொலைசெய்தது தெரியவந்தது.

உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு: கொலையான மதன் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னா், அவரது மனைவி மோனிஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2 வது நாளாக மறியல்: 100க்கும் மேற்பட்டோா் கைது

தோ்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜக்) சாா்பில் வெள்... மேலும் பார்க்க

எா்ணாகுளம் - பாட்னா இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

சேலத்தில் ரெளடி மதன் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 2 போ் கைது

சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி மாவட்டம், பெரி... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்: கே.வீ.தங்கபாலு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என முன்னாள் மத்திய அமைச்சா் கே.வீ.தங்கபாலு தெரிவித்தாா். சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியை கடத்தியதாக விஏஓ மீது புகாா்

கல்லூரி மாணவியை கடத்திச் சென்று 2-ஆவது திருமணம் செய்த கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிமேட்டூா் வருவாய் கோட்டாட்சியரிடம் பெற்றோா், உறவினா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூா் தெ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி: அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு!

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சத்தை மோசடி செய்த அதிமுக பிரமுகா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரை அடுத்த எம்.சி. ராஜா நகரைச் சோ்ந்தவா் ரமேஷ... மேலும் பார்க்க