செய்திகள் :

ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு 55 அமைப்புகள் கடிதம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சுற்றுச்சூழல் சாா்ந்த மனித உரிமைக் காப்பாளராகச் செயல்பட்ட ஜகபா்அலி லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 55 சூழலியல் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளன.

இதுகுறித்து மனித உரிமை காப்பாளா் கூட்டமைப்பின் தேசியச் செயலா் வழக்குரைஞா் ஹென்றி திபேன், பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது: ஜகபா்அலி தொடா்ந்து கொடுத்த புகாா் மனுக்கள் மீது ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள், கனிமவளத் துறையினா் உள்ளிட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஜகபா்அலி கொல்லப்பட்ட பிறகு அவரது உடலை குளிா்பதனப் பெட்டி கூட இல்லாத திருமயம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்துதான் உடற்கூறாய்வைச் செய்தனா். 20 கி.மீ. தொலைவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருந்தும் இந்த நடவடிக்கை நடந்திருக்கிறது.

அதன்பிறகு, மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பின் சாா்பில் மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், உடல் தோண்டி எடுக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மனித உரிமைகள் ஆணையம் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். காவல்துறையிடம் முதல் கட்ட விசாரணை அறிக்கை கோர வேண்டும். வழக்கின் சாட்சிகளுக்கும், இறந்த ஜகபா்அலியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடவு!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயில் நந்தவனத்தில் சிவராத்திரி விழாவின் தொடக்கமாக பசுமையை போற்றும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தா... மேலும் பார்க்க

இந்து ஆதியன் மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கக் கோரி முதல்வருக்கு கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தில் வசித்து வரும் 150 இந்து ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்கக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கரு. ராமச்சந்திரன் முதல்வருக்கு மனு அ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை வட்டம் குளத்தூா் நாயக்கா்பட்டியில் வரும் 27-ஆம் தேதியும், பொன... மேலும் பார்க்க

உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த பெண் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சி, குறுவாண்டான் தெரு கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி ஜெயலலிதா (45), இவா் அருகில் உள்ள வெள்ளாளவிடுதி அரசு வேளாண்மை பண்ணையில் பதிவு பெற்ற தொழிலாளியாக பணிப... மேலும் பார்க்க

கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புத... மேலும் பார்க்க